December 6, 2025, 8:14 AM
23.8 C
Chennai

திருச்சி அருகே அரசு பஸ்-லாரி மோதல்: 22 பயணிகள் படுகாயம்

மண்ணச்சநல்லூர்:சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்றிரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை திருச்சி சிறுகனூர் பெட்ரோல் பங்க் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் பெண்ணாடத்தில் இருந்து தேனி நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.இந்த நிலையில் எதிர்பாராத விதமாக லாரியின் பின் புறம், அரசு விரைவு பஸ் மோதியது. பின்னர் நிலை தடுமாறிய பஸ், அப்பகுதியில் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதில் பஸ் பயணிகள் 22 பேர் காயமடைந்தனர்.இது குறித்த தகவல் அறிந்ததும் சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மனோகர், சப்-இன்ஸ்பெக் டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பின்னர் காயமடைந்த அனைவரையும் மீட்டு இருங்களூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.காயமடைந்தவர்கள் விவரம் வருமாறு:–சேகர் (வயது 32), பஸ் டிரைவர், மதுரை திருமங்கலம், கமலகண்ணன் (38), மதுரை, சுரேஷ் (28), பொன்னமராவதி, முருகன் (22), ஸ்ரீரங்கம் சேதுராப்பட்டி, பாத்திமா (22), சென்னை போரூர், மஸ்தான் அலி (28), திருபுவனம், ராபிகாபீவி (35), முகமது கதிஜா (12), கோவிந்த சாமி (22), தென்னிலைப்பட்டி, இலுப்பூர், சண்முகம் (35), பூலாங்குளத்துப்பட்டி, ஸ்ரீ ரங்கம், இஸ்மான்பீவி, ஆலங்குளம், நெல்லை மாவட்டம், ரமேஷ் (22), வானகரம், சென்னை, ஜெனி (24), பெத்தநாடார்பட்டி, நெல்லை. இவர்கள் உள்பட 22 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

[wp_ad_camp_4]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories