திருச்செந்தூர் முருகனுக்கு ஒரிஜினல் சந்தனம் அரைத்துப் போட வேண்டும்: இந்து தமிழர் கட்சி கோரிக்கை!

thiruchendur - 2026

திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் திருக்கோயில் சுவாமிக்கு சந்தன லேபனத்திற்கு- சந்தன காப்பிற்கு “இயற்கை ஒரிஜினல் சந்தனம் “வழங்கிட இந்து தமிழர் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர், கோயில் தக்கார்  ஆகியோருக்கு அளிக்கப் பட்டுள்ள கோரிக்கை மனுவில்,  திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் சுவாமி மூலவருக்கு சந்தனக்கட்டை மூலமாக கிடைக்கப்பெறும் “தூய்மையான ஒரிஜினல் சந்தனம்” அரைத்து சாத்தப்பட வேண்டும் என்றும், இதற்குரிய வழிவகையை ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்றும் கோரப் பட்டுள்ளது.

இது குறித்து இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் தெரிவித்த போது,  திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தமாதன பர்வத குகைக்குள் முருகன் உள்ளதால் குளிர்ச்சிக்கு முருகனுக்கு சந்தன காப்பு வேண்டுதல் மிகவும் விஷேசம். சுவாமிக்கு நித்யபடி – தினசரி சந்தனம் பழைய படித்தலப்படி 1.365 கிராம் அளவு சந்தனம் அரைத்து சாத்தப்பட்டு வந்தது. பின்னர் கலப்பட சந்தனம் சாத்தப்பட்ட காரணத்தால் பக்தர்களின் எதிர்ப்பால் தரமான சந்தனம் சாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் விளைவால் சந்தனகாப்பு சாத்துதலும் இடையில் நிறுத்தப்பட்டதாக
அறிய வருகிறோம்.

தற்பொழுது கொடுக்கும் சந்தனம் 400கிராம் கொடுக்கப்படுகிறது. பக்தர்களின் கோரிக்கை என்னவென்றால் ஒரிஜினல் சந்தனக்கட்டையை திருக்கோயில் அலுவலகத்தில் மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டால், உபயதாரர்கள்
ஒவ்வொரு சந்தன லேபனத்திற்க்கும்- சந்தன காப்பிற்கு ஒரு கிலோ சந்தனக் கட்டையை சந்தை விலைப்படி நிர்வாகத்தில் வாங்க சந்தன லேபன உபயதார்கள் தயாராக இருக்கிறார்கள் .

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

சந்தை விலையில் சந்தனம் கிடைத்தால் அதை கோவிலில் சந்தன அறையில் அரைத்து முருகனுக்கு சாத்தினால் ஒரிஜனல் -இயற்கை  சந்தனத்தால் முருகன்
மனம் குளிர்வார். பக்தர்கள் மனம் குளிர்வார்கள். இது தொடர்பாக, கோரிக்கை மனுவினை அளித்துள்ளோம். அறநிலையத்துறை ஆவன செய்யும் என்று நம்புகிறோம் என்றார்.

1 COMMENT

  1. அண்டை மாநிலமான கேரளத்தில் எல்லாமே ஒரிஜினல் சந்தனம் தான் சந்தனக்காப்புக்கு உபயோகிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஊழல் மலிந்து விட்டதால், எல்லாம் மரத்தூள் தான். அதை சந்தனம் என்ற பெயரில் விற்பனை செய்கின்றனர். பக்தர்கள் கட்டணம் செலுத்த தயார் என்றபோது ஒரிஜினல் சந்தனம் வாங்க என்ன கேடு? இந்து அறநிலையத்துறை ஆலய வருமானம் மற்றும் அதிகாரிகளுக்கு சௌகரியங்கள் என்பதை தான் பார்க்கிறது. கோவில் சுத்தம், தடையில்லாத நித்தியபடி பூஜை, அர்ச்சகர்கள் சம்பளம், பக்தர்களுக்கு வசதிகள், தரமான பிரசாதம் என்பவற்றை எல்லாம் இன்னும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories