December 6, 2025, 5:22 AM
24.9 C
Chennai

“நீ, எந்தக் கட்சி? கூப்பிடுகிற கட்சியா? கூப்பிடாத கட்சியா?…

18698_10153209347029244_3030028360467212073_n

“நீ, எந்தக் கட்சி?
 
கூப்பிடுகிற கட்சியா?
கூப்பிடாத கட்சியா?…
 
சொன்னவர்-எம்.ஆர்.ஸ்ரீநிவாஸன் (அபிராமபுரம்)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
1934 ஜூன் மாதம் ஐந்தாம் தேதி முதல்
பதினெட்டாம் தேதிவரை,(காசியாத்திரை சமயத்தில்)
நாகபுரியில் தங்கியிருந்தார்கள்,மகாப் பெரியவாள்.
 
என் தகப்பனாருக்கு, நாகபுரியில் போஸ்டல் ஆடிட்
ஆபீசில் வேலை. அந்தக் காலத்து மனிதரல்லவா?
தமிழ்நாட்டு அந்தண வகுப்புச் சம்பிரதாயப்படி
சிகை,பஜனை,நாமசங்கீர்த்தனம்,உஞ்சவிருத்தி,
ராதா கல்யாணம்- எல்லாம் முறைப்படி
நடத்திக் கொண்டிருந்தார்.
 
தரிசனத்துக்குச் சென்றார், அப்பா.
 
“திருச்சி – மண்ணச்சநல்லூர். பேர்,ராமனாதன்..”
என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
 
பெரியவா மந்தகாசத்துடன் என் தகப்பனாரைப்
பார்த்தார்கள்.
 
“நீ, எந்தக் கட்சி?..கூப்பிடுகிற கட்சியா?
கூப்பிடாத கட்சியா?…
 
அப்பாவுக்கு அதிர்ச்சி. தமிழ்நாட்டின் ஏதோ ஒரு
கிராமத்தில் அந்தணர் தெருவில் நிலவிவரும் ஒரு
நுட்பமான மரபு,பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது.
தெரிந்து நினைவு வைத்துக்கொண்டு, சரியான
பேர்வழியிடத்தில் இக்கட்டான சூழ்நிலையில்
போட்டு உடைக்கிறார்களே!..
 
மண்ணச்சநல்லூரில் ஸ்ரீராம மடம் என்று
அனைவருக்கும் பொதுவான ஒரு மடம் உண்டு.
தினந்தோறும் பஜனை நாமசங்கீர்த்தனம் நடைபெறும்.
பஜனை என்றால்,பிரசாதம் முக்கியமாயிற்றே!
தினமும் ஒவ்வோரு வீட்டார் மண்டகப்படி.
 
சிலர், தங்கள் மண்டகப்படி நாள்களில் – அதாவது
தங்கள் வீட்டில் பிரசாதம் தயாரித்துக்கொண்டு வந்து
விநியோகம் செய்யும் நாள்களில் – தெருவில் ஒவ்வொரு
வீட்டுக்கும் சென்று, “இன்று எங்கள் மண்டகப்படி.
நீங்கள் குடும்பத்துடன் வந்து பிரசாதம் பெற்றுக்-
-கொள்ள வேண்டும்” என்று அழைப்பார்கள்.
 
இவர்கள், ‘கூப்பிடுகிற கட்சி!’
 
மற்றொரு சாரார், “இது என்ன, எங்கள் வீட்டுக்
கல்யாணமா? தினம் தினம் பஜனை நடக்கிறது.
ராம மடம்,பொதுச்சொத்து தாங்களாகவே வந்து
பிரசாதம் பெற்றுக்கொள்ள வேண்டியது தானே?
இதற்கு என்ன தனி அழைப்பு?” என்று யாரையும்
கூப்பிடமாட்டார்களாம்!
 
இவர்கள்,’கூப்பிடாத கட்சி!’
 
நாங்கள் கூப்பிடுகிற கட்சி தான். வீடு வீடாகச்
சென்று, கூப்பிடுவோம்.
 
பெரியவாள் ஆசிர்வாதம் செய்து பிரசாதம்
கொடுத்தார்களாம்.
 
(பல ஆண்டுகளுக்குப் பின்னர், என் தந்தை
சொன்ன தகவல் இது.)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories