‘லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்யாணி ஆஸ்பத்திரி”(உருவான கதை-மயிலை)

20fr_mahaperiyava10_634796g

‘லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி
மற்றும் கல்யாணி ஆஸ்பத்திரி”(உருவான கதை-மயிலை)
 
(“உங்களுக்கு என்று குழந்தைகள் இல்லாவிட்டால் என்ன? பல ஏழை மக்களுக்கு அப்பா,அம்மாவாக இருங்கள்.நீ, நியாயமாக வக்கீல் தொழில் செய்து, வரும் வருமானத்தைக்கொண்டு கல்விச்சாலை அமைத்து, ஞானதானம் செய். உன் பெயர் நிலைத்து நிற்கும். அதேபோல், பிரஸவ ஆஸ்பத்திரி அமைத்து உன் பத்தினியின் பெயரையும் நிலை நிறுத்து” என்றார்கள்,மகாஸ்வாமிகள்)
 
(பெரியவாளின் வாக்கு, வேதவாக்கு.!)
 
சொன்னவர்; வி.ஸ்ரீநிவாஸன், சென்னை.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
 
சென்னையில் மிகுந்த செல்வச் செழிப்புடன்
விளங்கிய வழக்கறிஞர் ஸர். பி.எஸ்.சிவஸ்வாமி அய்யர்.
மனைவியின் பெயர், கல்யாணி.
வீட்டின் பெயர் ‘சுதாமா’. அந்தக்காலத்தில்
மிகப் பெரிய வீடு அது.
 
பட்டணத்தில் முகாமிட்டிருந்த காலத்தில்,ஒரு நாள்,
மகாஸ்வாமிகள், முன்னறிவிப்பின்றி, சுதாமாவுக்கு
விஜயம் செய்து சிவஸ்வாமி தம்பதிகளை ஆனந்தக்
கடலில் மூழ்கச் செய்துவிட்டார்.
 
தம்பதியருக்கு சந்தான பாக்கியம் இல்லை.
 
“உங்களுக்கு என்று குழந்தைகள் இல்லாவிட்டால் என்ன?
பல ஏழை மக்களுக்கு அப்பா,அம்மாவாக இருங்கள்.
நீ, நியாயமாக வக்கீல் தொழில் செய்து, வரும் வருமானத்தைக்கொண்டு கல்விச்சாலை அமைத்து, ஞானதானம் செய். உன் பெயர் நிலைத்து நிற்கும்.
அதேபோல், பிரஸவ ஆஸ்பத்திரி அமைத்து உன் பத்தினியின்பெயரையும் நிலை நிறுத்து” என்றார்கள்,மகாஸ்வாமிகள்.
 
அந்த உத்தரவை, அவ்வாறே, நிறைவேற்றிக்காட்டினார்,
ஸ்ரீசிவஸ்வாமி அய்யர். அரண்மனை போன்ற சுதாமாவை
விற்று, சலிவன்கார்டன்ஸ் சாலையில் ஒரு வீட்டை
வாங்கி வசிக்கத் தொடங்கினார்.
 
எட்வர்டு எலியட்ஸ் சாலையில் (தற்போதைய
பிரசிடெண்ட் ஹோட்டல் அருகே) ;கல்யாணி ஆஸ்பத்திரி
ஏற்படுத்தி, இலவசமாக மகப்பேறு மருத்துவப்பணியைத்
துவக்கினார். அந்தத் தெய்வீகப்பணி, இன்றும் தொடர்ந்து
நல்ல முறையில் நடந்து வருகிறது என்றால்,
மகாப்பெரியவாளின் பேரருளே முக்கிய காரணம்.
 
அந்தக்காலத்தில், ஜெயப்பூர் மகாராஜாவின்
ஆதிக்கத்திலிருந்த (கபாலீஸ்வரர் கோவில் கிழக்கு
மாட வீதியிலிருந்து பிரியும் சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, ரஸிக ரஞ்ஜனி சபாவுக்கு எதிரில்) பெண்கள் பள்ளிக்கூடத்தை, தன் சொந்தப் பணத்தைக் கொண்டு வாங்கி, லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக’ மேம்படையச் செய்தார்.
 
பெரியவாளின் வாக்கு, வேதவாக்கு.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories