ஐபிஎல் 2020: முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி!

ipl2020-csk-mi
ipl2020-csk-mi

இந்தியாவில் கொரோனோ நோய்த் தொற்று பரவல் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்த தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இந்த முறை ஐபிஎல் போட்டிகள் நடத்தப் படுகின்றன. இதற்காக அணி வீரர்கள் எமிரேட்ஸ் சென்று பயிற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே அணி வீரர்கள் சிலருக்கு கோவிட் 19 தொற்று கண்டறியப் பட்டதை அடுத்து அவர்கள் போட்டியில் இருந்து வெளியேறினர்.

இந்நிலையில், ஐபிஎல் சீசன் 13 முதல் போட்டி, அபுதாபி நகரில் நடைபெற்றது. இதில், சென்னை, மும்பை அணிகள் மோதின. இந்த முதல் போட்டியில், சென்னை அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து, மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

இந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பந்து வீசத் தீர்மானித்தார். இதைஅடுத்து களம் இறங்கிய மும்பை அணியில், சௌரப் திவாரி 31 பந்துகளில் 42 ரன்னும், டி காக் 20 பந்துகளில் 33 ரன்னும் எடுத்து கை கொடுத்தனர். போலார்ட் 18, சூர்யகுமார் 17 ரன் எடுக்க, மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் லுங்கிடி 3, ஜடேஜா, தீபக் சகார் தலா 2, சாம் கரான், பியுஸ் சாவ்லா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

163 ரன் என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய சென்னை அணியில், தொடக்க வீரர்கள் வாட்சன் (4), முரளி விஜய் (1) இருவருமே எல்பிடபிள்யு முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினர். அடுத்தடுத்து இரு தொடக்க விக்கெட்டுகள் இழந்த போதிலும், அபாரமாக ஆடிய அம்பதி ராயுடு 48 பந்தில் 71 ரன் எடுத்தும், டுபிளசி 44 பந்தில் 58 எடுத்து ஆட்டமிழக்காமலும், சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இறுதியில் சென்னை அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது! இதை அடுத்து, முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories