ஐபிஎல் 2020: முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி!

ipl2020-csk-mi
ipl2020-csk-mi

இந்தியாவில் கொரோனோ நோய்த் தொற்று பரவல் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்த தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இந்த முறை ஐபிஎல் போட்டிகள் நடத்தப் படுகின்றன. இதற்காக அணி வீரர்கள் எமிரேட்ஸ் சென்று பயிற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே அணி வீரர்கள் சிலருக்கு கோவிட் 19 தொற்று கண்டறியப் பட்டதை அடுத்து அவர்கள் போட்டியில் இருந்து வெளியேறினர்.

இந்நிலையில், ஐபிஎல் சீசன் 13 முதல் போட்டி, அபுதாபி நகரில் நடைபெற்றது. இதில், சென்னை, மும்பை அணிகள் மோதின. இந்த முதல் போட்டியில், சென்னை அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து, மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

இந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பந்து வீசத் தீர்மானித்தார். இதைஅடுத்து களம் இறங்கிய மும்பை அணியில், சௌரப் திவாரி 31 பந்துகளில் 42 ரன்னும், டி காக் 20 பந்துகளில் 33 ரன்னும் எடுத்து கை கொடுத்தனர். போலார்ட் 18, சூர்யகுமார் 17 ரன் எடுக்க, மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் லுங்கிடி 3, ஜடேஜா, தீபக் சகார் தலா 2, சாம் கரான், பியுஸ் சாவ்லா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

163 ரன் என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய சென்னை அணியில், தொடக்க வீரர்கள் வாட்சன் (4), முரளி விஜய் (1) இருவருமே எல்பிடபிள்யு முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினர். அடுத்தடுத்து இரு தொடக்க விக்கெட்டுகள் இழந்த போதிலும், அபாரமாக ஆடிய அம்பதி ராயுடு 48 பந்தில் 71 ரன் எடுத்தும், டுபிளசி 44 பந்தில் 58 எடுத்து ஆட்டமிழக்காமலும், சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இறுதியில் சென்னை அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது! இதை அடுத்து, முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories