நவராத்திரியின் போது அகண்ட தீபம் ஏற்றுவது ஏன்? அதன் பலன் என்ன?

deepam1
deepam1

நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!

கேள்வி: நவராத்திரியின் போது அகண்ட தீபம் ஏற்றுவதன்? காரணம் என்ன? அதன் பலன் என்ன?

பதில்:அகண்ட தீபம் ஏற்றத்தான் வேண்டும் என்ற நியமமில்லை. ஏற்றுவதில் தவறு எதுவும் இல்லை. அப்படி ஒரு சம்பிரதாயம் உள்ளது.

அகண்ட தீபம் ஒன்பது நாட்களும் கலசத்தோடு, அல்லது அடுக்கி வைக்கப்பட்ட கொலு மண்டபத்தோடு கூட இருக்க வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம் உள்ளது.

அகண்ட தீபம் ஏற்றும் போது அதனை ஒன்பது நாட்களும் கவனமாக ஒளிரும்படி காப்பாற்றி வர வேண்டும். அதற்கான நம்பிக்கையும் சூழலும் இருப்பவர்கள் அகண்ட தீபம் ஏற்றி வழிபடலாம்.

பொதுவாக தீபம் ஏற்றுவதன் முக்கிய உத்தேசம் தேவதைகளின் சக்தியை ஆவாகனம் செய்வதே. ஏனென்றால் தேவதைகள் ஒளி வடிவம் உடையவர்கள். பிரகாசமே வடிவமாகக் கொண்ட தேவதைகள் நம் இருப்பிடத்திற்கு வரவேண்டுமென்றால் பிரகாச வடிவான தீபம் ஏற்றப்பட வேண்டும்.

bharani deepam
bharani deepam

அதனால்தான் தெய்வ வழிபாட்டைத் தொடங்கும்போதும் தீபம் ஏற்றுகிறோம். நடுவிலும் தீபம் காண்பிக்கிறோம். இறுதியில் கற்பூர ஆரத்தி வடிவில் ஜோதியை சமர்ப்பிக்கிறோம்.

ஜோதி வடிவினரான தெய்வங்கள் அங்கு வந்து ஆசி வழங்கும் விதமாக பூஜை தடையின்றி நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையோடு அகண்ட தீபம் ஏற்றும் வழிமுறை காணப்படுகிறது.

அதேபோல் நம் சங்கல்பம் விருத்தி அடைய வேண்டும்… அது முழுமை அடைய வேண்டும் என்ற கோரிக்கையோடும் அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது.

அகண்ட தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும். முக்கியமாக ஆயுள் விருத்தியும் ஆரோக்கிய விருத்தியும் கிடைக்கும்.

‘லோகைக தீபாங்குரா’ ஆகிய அம்பாளை ஜோதி வடிவில் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறோம். அகண்ட தீபத்தில் ஜோதி வடிவத்தில் அம்மன் அசையாமல் நம் வீட்டில் வீற்றிருந்து நம் வழிபாட்டை ஏற்கிறாள்.

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories