நவராத்திரி ஸ்பெஷல்: லலிதா சஹஸ்ரநாமம் படிப்பதால் என்ன நன்மை?

lalithambal
lalithambal

நவராத்திரி ஸ்பெஷல்…
ஆன்மீக கேள்வி பதில்.!

கேள்வி: லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் எந்த புராணத்தில் உள்ளது?  லலிதா சகஸ்ரம் பிடிப்பதால் வரும் நன்மை என்ன?

பதில்: லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பிரம்மாண்ட புராணத்தில் உத்தர காண்டத்தில் உள்ளது. இதனை சாட்சாத் ஹயக்ரீவ சுவாமி அகஸ்திய மகரிஷிக்கு உபதேசித்தார்.
லலிதா தேவியின் வரலாற்றையும் லலிதா உபாசனைக்குத் தேவையான அனைத்து ரகசியங்களையும் அகஸ்தியருக்கு போதித்தார் ஹயகிரிவர். 

அதுமட்டுமல்ல. ராஜசியாமளா சகஸ்ரம், வாராஹி சஹஸ்ரம்… இவை அனைத்தையும் போதித்த பின் லலிதா சஹஸ்ரநாமத்தை போதித்து விவரிக்கிறார் ஹயக்ரீவர்.

லலிதா சகஸ்ரநாமம் படிப்பதால் வரும் நன்மை என்ன என்றால்… ஒன்றா? இரண்டா? அநேக அநேக நன்மைகள் உள்ளன. அனேக வழிமுறைகளும் உள்ளன.

பிரதி தினமும் லலிதா சஹஸ்ரநாமத்தை பக்தியோடு படித்தால் அது பலப்பல தோஷங்களை நீக்குவதோடு உள்ளத்தை தூய்மையாக்கி ஞானத்தையும் அளிக்கிறது. இது மிக முக்கியமான நன்மை.

ஆரோக்கியம் தேவை என்றால் ஒருவித உபாசனை வழிமுறை உள்ளது. அபீஷ்ட சித்திக்காக பல வழிமுறைகள் உள்ளன. செல்வம், சந்தானம்… இவ்வாறு காமிய பலனுக்காக ஒவ்வொரு பலனுக்கும் லலிதா சஹஸ்ரநாமத்தை ஒவ்வொரு பிரயோகத்தோடு படிக்கும் விதானம் உள்ளது.

இவற்றைக் குறித்து லலிதா சகஸ்ரநாமத்தின் பலஸ்ருதியில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அநேக நன்மைகளை அளிக்கக் கூடிய சக்தி லலிதா சகஸ்ரநாமத்தில் உள்ளது.

மற்றொரு சிறப்பு என்னவென்றால் இது வெறும் அம்பாளின் பெயர்கள் மட்டுமே அல்ல. இது ஒரு விஞ்ஞானம். இது ஒரு மந்திர சாஸ்திரம். இது ஒரு தர்ம சாஸ்திரம். இது ஒரு யோக விஞ்ஞானம். இது ஒரு தத்துவ விஞ்ஞானம். இவை அனைத்தும் லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ளன. உண்மையில் இதுபோன்ற சகஸ்ரநாம ஸ்தோத்திரம் வேறொன்று நமக்குக் கிடையாது. அத்தனை சிறப்பானது.

இதில் சில மந்திரங்கள் கொத்துக்கொத்தாக உள்ளன. சில நாமங்களின் வரிசையைப் பார்க்கும்போது அந்தந்த வரிசைக்கு ஒவ்வொரு பலன் இருக்கும். அதனால் முழுமையாக லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர பாராயணம் செய்வதோடன்றி அதில் ஒவ்வொரு பலனை உத்தேசித்து ஒவ்வொன்றைத் தேர்ந்தெடுத்து ஜபம் செய்யும் வழிமுறை உள்ளது.

உதாரணத்திற்கு “சர்வவ்யாதி ப்ரசமனீ சர்வ ம்ருத்யு நிவாரிணீ !!” -112 
இந்த நாமத்தை தினமும் தியானம் செய்து பல முறை ஜபம் செய்தால் ஆரோக்கியம் கிடைக்கும்.

அதே போல் 143. பவதாவ ஸுதாவ்ருஷ்டி: பாபாரண்ய தவாநலா !தௌர்பாக்ய தூல வா தூலா ஜராத்வாந்தரவிப்ரபா !!

144. பாக்யாப்தி சந்த்ரிகா பக்தசித்த கேகி கநாகநா !ரோகபர்வத தம்போளிர் ம்ருத்யுதாரு குடாரிகா !! 

இந்த நாமங்களின் கூட்டத்தை நிரந்தரம் ஜபம் செய்து வந்தால் ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் விலக்கும் சக்தி இதில் உள்ளது.

இவ்வாறு ஆராய்ந்து விவரித்துக் கொண்டே போனால் லலிதா சஹஸ்ரநாமம் பலப் பல பலன்களை அளிக்கும் மகா கற்பக விருட்சம் என்பது புலனாகும்.

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories