பெண்களுக்கு உயர்வு எங்கே? திமுக Vs பாஜக..!

poongothai-tamilisai
poongothai-tamilisai

பூங்கோதை ஆலடி அருணா நேற்று அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

நேற்று காலை, உடனடியாக நெல்லையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆலங்குளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடிஅருணா, மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். தூத்துக்குடிக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனிடையே, பூங்கோதையின் விவகாரத்தை பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் அலசி ஆராய்ந்தனர். அவர் அதற்கு முந்தைய நாள் தென்காசி மாவட்டம் கடையத்தில் நடைபெற்ற திமுக., பூத் கமிட்டி கூட்டத்தில், கையெடுத்து கெஞ்சி, திமுக., ஆண்கள் சிலரில் காலில் விழும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதைக் கண்டு பலரும் மனம் பதைபதைத்தார்கள். பெண்களுக்கு திமுக.,வினர் அளிக்கும் மரியாதையை குறித்து கருத்து தெரிவித்தனர் பலர்.

பெண்களுக்கு திமுக., காட்டும் அவமரியாதையையும் பாஜக., கொடுத்துள்ள இடத்தையும் குறிப்பிட்டு, பெண்களுக்கு மதிப்பளிக்கும் கட்சி எது என விவாதமும் களை கட்டியது.

இது குறித்த ஒரு பதிவு… வாட்ஸ்அப் பகிர்வு..!

டாக்டர் பூங்கோதையின் தற்கொலை முயற்சி நேற்று தமிழகத்தையே புரட்டி போட்ட சம்பவமாக்கிவிட்டது. விஷயத்துக்கு ஒரே காரணம் திமுக தலைமையின் பக்குவற்ற அணுகுமுறையும் அக்கட்சியின் உட்கட்சி பூசலும்!

இந்த விவகாரம் வித்தியாசமானது, தென்னகத்தில் என்ன மர்மமோ தெரியாது பிரபல அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஆண் வாரிசுகள் சொதப்பிவிடும் பெண் வாரிசுகளே நிலைக்கும்

மதுரை மீனாட்சியின் மண் என்பதால் என்னமோ, அதுதான் அங்கு நடக்கின்றது! பெரியசாமி மகள் கீதா ஜீவன், தங்கபாண்டியர் மகள் தமிழச்சி, ஆலடி அருணா மகள் பூங்கோதை எல்லாம் அப்படி வாரிசாக வந்தவர்களே, கட்சி தாண்டி பாஜகவின் தமிழிசை அக்கா வரை இந்த ராசி உண்டு

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இப்படி பெண் வாரிசுகளுக்கு கைகொடுக்கும் பூமியினை கருணாநிதி விடுவாரா? தன் மகளை அங்கே அனுப்பி வைத்து பல்ஸ் பார்த்தார், அவர் காலத்துக்கு பின் “என் தாய் நாடார்” என புகுந்துவிட்டார் கனிமொழி

கனிமொழியின் வரவு ஒருமாதிரியான உட்கட்சி பூசலை கொடுத்தது, தென்னகம் ஸ்டாலினார் அணி கனிமொழி அணி என பிரியவில்லை என்றாலும் அப்படி காட்சிகள் நடந்தன‌

மிக உச்சமாக நெல்லையின் சாதி பின்னணி இதில் அழகாக வெடித்தது, நாடார் திமுகவினருக்கு திரும்பும் இடமெல்லாம் பதவியா என கொதித்தன சில சமூகம்

இப்படியே குழப்பம் மிஞ்சி கொண்டிருக்க பழனிச்சாமி தென்காசியினை தனி மாவட்டமாக்கினார்

இப்படி அரசு ஆவணபடி ஆக்கினால் மனதளவில் தமிழகத்தை ஆளும் திமுகவும் பிரிக்க வேண்டும் அல்லவா? இதனால் மாமன்னர் திருகுவளை இளவரசர் சில சீர்திருத்தங்களை செய்தார்

விளைவு வெடித்தது! உதயநிதியினை அடுத்த தலைவராக்கி பார்க்கும் ஆசையில் இருக்கும் ஸ்டாலின் வழியில் யாராவது குறுக்கே வந்தால் விடுவார்களா? அதுதான் பூங்கோதைக்கும் நடந்தது

பயங்கர ஆட்டங்கள் நடந்திருக்கின்றன ஒரு கட்டத்தில் ஒரு கோஷ்டி என்ன பெரிய திமுக? பணம் வெட்டினால் அங்கே சீட் மற்றும் மரியாதை என மிக அகங்காரமாக ஆடியதில் பூங்கோதையும் வலுத்து பிடித்திருக்கின்றார்

என்ன இருந்தாலும் பூங்கோதை கட்சிக்கு சீனியர், கனிமொழிக்கு முன்பே திமுக மகளிர் அணியின் தூணாக இருந்தவர் , அவர் காண வளர்ந்தவர் உதயநிதி

நிச்சயம் தென்னகத்தில் மிக பெரிய அனுபவமும் முன்னுரிமையும் கொண்டவர் பூங்கோதை அதில் சந்தேகமில்லை! ஆனால் கட்சியின் உட்கட்சி குழப்பங்கள் எல்லை மீறி நிற்கின்றன, பணம் இருப்போர் எதையும் சாதிக்கும் நிலைக்கு வந்தாயிற்று!

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

அணி அணியாக செயல்படுகின்றார்கள், தேர்தல் நெருங்க நெருங்க அது அதிகமாகின்றது! அவர் அந்த அணி இவர் இந்த அணி இவர் காசுள்ள அணி என பிரிந்து மோதுவதில் நிலைகுலைந்து வீழ்ந்து கிடக்கின்றார் பூங்கோதை

பூங்கோதை நேற்று ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து அழும் காட்சி மனதை உருக வைத்தது! ஆம் அக்கட்சிக்கு நிழலாய் நின்ற ஒருவனின் மகள், அதுவும் நீண்ட காலம் உழைத்த ஒரு பெண்மணி, நிச்சயம் எம்பியாய் பதவி உயர்வுடன் எங்கோ உயர இருக்க வேண்டிய பெண்மணி அதுவும் டாக்டர் ஒரு வார்டு பூத் கமிட்டி பிரச்சினையில் கண்டவன் காலில் விழுவதெல்லாம் எதை காட்டுகின்றது?

திமுகவில் பணமும், அது கொடுக்கும் அதிகாரமும், ஒரு குடும்பமும், அக்குடும்பத்தின் பல சாதி எல்லா சாதிகளிலும் நுழைந்து அரசியல் செய்கின்றது செய்கின்றது என்பது தெரிகின்றது! அது முன்னாள் தலைவன் மகளை, முன்னாள் அமைச்சரை, ஒரு எம்.எல்.ஏவினையே கதற வைக்கின்றது என்றால் நிலமையின் வீரியம் என்ன?

ஒரு பெண்ணை அதுவும் கட்சியின் அதிசீனியர் பெண்ணை கதறவைத்துவிட்டுத்தான் பெரியாசிசம், பெண் விடுதலை, இந்துமதம் பெண் அடிமைதனம் என பேசிகொண்டிருக்கின்றது அக்கும்பல்!

பெண்ணுரிமை போராளி பெரியாரிஸ்டுகள் வீரமணி, சுபவீ, சகோதரி அருள்மொழி இப்பொழுது வாயை திறக்கட்டும் பார்க்கலாம்? ஒரு பெண்ணுரிமை போராளி பேசுவார்கள்? திருமா பேசுவாரா? நிச்சயம் மாட்டார்!

மனுதர்மம் எங்கே இருக்கின்றது? நிச்சயம் அறிவாலயத்தில்தான் இருக்கின்றது! சரி, அனிதா என்றதும் குழிக்குள் சிறுவன் விழுந்தான் என்றதும் சாத்தான்குளம் என்றதும் ஓடிய கருணாநிதி குடும்பம் இப்பொழுது அமைதி ஏன்?

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்
poongothai
poongothai

உழைத்த கட்சிக்காரி செத்தால் வரமாட்டார்கள் ஆனால் எங்கோ யாரோ என்றால் ஓடுவார்களா? தா.கிருட்டினன் முதல் எத்தனையோ பேரை தன் சொந்த நலனுக்காக பலிகொடுத்த கட்சி இப்பொழுது பூங்கோதையின் கழுத்தையும் நெறிக்கின்றது

இது அதிர்ச்சியுமல்ல, ஆச்சரியுமல்ல அவர்கள் இயல்பு. இப்பக்கம் மிக மூத்த கட்சி பெண்மணியினை தெருவில் திமுக கதற வைக்கின்றது, அப்பக்கம் பாஜக பெண்களை கவர்னராக, நிதி அமைச்சராக, கட்சி தலைவராக இன்னும் பல கவுரவமான பொறுப்புகளை கொடுத்து உயர்த்துகின்றது

எங்கே இருக்கின்றது பெண் சுதந்திரம்?, எங்கே இருக்கின்றது பெண் அடிமைதனம்? என்பதை இனியும் விளக்கி சொல்ல அவசியமில்லை! ஒரு விஷயதோடு முடிக்கலாம், கோஷ்டி சேரும் கட்சி எதுவும் உருப்படாது. கோஷ்டிகள் அடித்து கொள்ளும் கட்சி நாசமாய் போகும்!

உதாரணம் காங்கிரஸ், மிக சிறந்த உதாரணம் தமிழக காங்கிரஸ். திமுகவும் அதே நிலைக்கு வந்தாயிற்று! சகோதரி பூங்கோதை, தென்னக அடையாளம், பாரதி கண்ட பெண்விடுதலையின் முகம். அவர் விரைவில் நலம்பெற்று வர பிரார்த்தனைகள்!

குற்றால நாதனும் , தென்காசி நாதனும், நெல்லையப்பரும் திருசெந்தூர் முருகனும் அவருக்கு நலம் அருளி மீட்டு வரட்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories