பெண்களுக்கு உயர்வு எங்கே? திமுக Vs பாஜக..!

poongothai-tamilisai
poongothai-tamilisai

பூங்கோதை ஆலடி அருணா நேற்று அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

நேற்று காலை, உடனடியாக நெல்லையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆலங்குளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடிஅருணா, மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். தூத்துக்குடிக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனிடையே, பூங்கோதையின் விவகாரத்தை பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் அலசி ஆராய்ந்தனர். அவர் அதற்கு முந்தைய நாள் தென்காசி மாவட்டம் கடையத்தில் நடைபெற்ற திமுக., பூத் கமிட்டி கூட்டத்தில், கையெடுத்து கெஞ்சி, திமுக., ஆண்கள் சிலரில் காலில் விழும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதைக் கண்டு பலரும் மனம் பதைபதைத்தார்கள். பெண்களுக்கு திமுக.,வினர் அளிக்கும் மரியாதையை குறித்து கருத்து தெரிவித்தனர் பலர்.

பெண்களுக்கு திமுக., காட்டும் அவமரியாதையையும் பாஜக., கொடுத்துள்ள இடத்தையும் குறிப்பிட்டு, பெண்களுக்கு மதிப்பளிக்கும் கட்சி எது என விவாதமும் களை கட்டியது.

இது குறித்த ஒரு பதிவு… வாட்ஸ்அப் பகிர்வு..!

டாக்டர் பூங்கோதையின் தற்கொலை முயற்சி நேற்று தமிழகத்தையே புரட்டி போட்ட சம்பவமாக்கிவிட்டது. விஷயத்துக்கு ஒரே காரணம் திமுக தலைமையின் பக்குவற்ற அணுகுமுறையும் அக்கட்சியின் உட்கட்சி பூசலும்!

இந்த விவகாரம் வித்தியாசமானது, தென்னகத்தில் என்ன மர்மமோ தெரியாது பிரபல அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஆண் வாரிசுகள் சொதப்பிவிடும் பெண் வாரிசுகளே நிலைக்கும்

மதுரை மீனாட்சியின் மண் என்பதால் என்னமோ, அதுதான் அங்கு நடக்கின்றது! பெரியசாமி மகள் கீதா ஜீவன், தங்கபாண்டியர் மகள் தமிழச்சி, ஆலடி அருணா மகள் பூங்கோதை எல்லாம் அப்படி வாரிசாக வந்தவர்களே, கட்சி தாண்டி பாஜகவின் தமிழிசை அக்கா வரை இந்த ராசி உண்டு

இப்படி பெண் வாரிசுகளுக்கு கைகொடுக்கும் பூமியினை கருணாநிதி விடுவாரா? தன் மகளை அங்கே அனுப்பி வைத்து பல்ஸ் பார்த்தார், அவர் காலத்துக்கு பின் “என் தாய் நாடார்” என புகுந்துவிட்டார் கனிமொழி

கனிமொழியின் வரவு ஒருமாதிரியான உட்கட்சி பூசலை கொடுத்தது, தென்னகம் ஸ்டாலினார் அணி கனிமொழி அணி என பிரியவில்லை என்றாலும் அப்படி காட்சிகள் நடந்தன‌

மிக உச்சமாக நெல்லையின் சாதி பின்னணி இதில் அழகாக வெடித்தது, நாடார் திமுகவினருக்கு திரும்பும் இடமெல்லாம் பதவியா என கொதித்தன சில சமூகம்

இப்படியே குழப்பம் மிஞ்சி கொண்டிருக்க பழனிச்சாமி தென்காசியினை தனி மாவட்டமாக்கினார்

இப்படி அரசு ஆவணபடி ஆக்கினால் மனதளவில் தமிழகத்தை ஆளும் திமுகவும் பிரிக்க வேண்டும் அல்லவா? இதனால் மாமன்னர் திருகுவளை இளவரசர் சில சீர்திருத்தங்களை செய்தார்

விளைவு வெடித்தது! உதயநிதியினை அடுத்த தலைவராக்கி பார்க்கும் ஆசையில் இருக்கும் ஸ்டாலின் வழியில் யாராவது குறுக்கே வந்தால் விடுவார்களா? அதுதான் பூங்கோதைக்கும் நடந்தது

பயங்கர ஆட்டங்கள் நடந்திருக்கின்றன ஒரு கட்டத்தில் ஒரு கோஷ்டி என்ன பெரிய திமுக? பணம் வெட்டினால் அங்கே சீட் மற்றும் மரியாதை என மிக அகங்காரமாக ஆடியதில் பூங்கோதையும் வலுத்து பிடித்திருக்கின்றார்

என்ன இருந்தாலும் பூங்கோதை கட்சிக்கு சீனியர், கனிமொழிக்கு முன்பே திமுக மகளிர் அணியின் தூணாக இருந்தவர் , அவர் காண வளர்ந்தவர் உதயநிதி

நிச்சயம் தென்னகத்தில் மிக பெரிய அனுபவமும் முன்னுரிமையும் கொண்டவர் பூங்கோதை அதில் சந்தேகமில்லை! ஆனால் கட்சியின் உட்கட்சி குழப்பங்கள் எல்லை மீறி நிற்கின்றன, பணம் இருப்போர் எதையும் சாதிக்கும் நிலைக்கு வந்தாயிற்று!

அணி அணியாக செயல்படுகின்றார்கள், தேர்தல் நெருங்க நெருங்க அது அதிகமாகின்றது! அவர் அந்த அணி இவர் இந்த அணி இவர் காசுள்ள அணி என பிரிந்து மோதுவதில் நிலைகுலைந்து வீழ்ந்து கிடக்கின்றார் பூங்கோதை

பூங்கோதை நேற்று ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து அழும் காட்சி மனதை உருக வைத்தது! ஆம் அக்கட்சிக்கு நிழலாய் நின்ற ஒருவனின் மகள், அதுவும் நீண்ட காலம் உழைத்த ஒரு பெண்மணி, நிச்சயம் எம்பியாய் பதவி உயர்வுடன் எங்கோ உயர இருக்க வேண்டிய பெண்மணி அதுவும் டாக்டர் ஒரு வார்டு பூத் கமிட்டி பிரச்சினையில் கண்டவன் காலில் விழுவதெல்லாம் எதை காட்டுகின்றது?

திமுகவில் பணமும், அது கொடுக்கும் அதிகாரமும், ஒரு குடும்பமும், அக்குடும்பத்தின் பல சாதி எல்லா சாதிகளிலும் நுழைந்து அரசியல் செய்கின்றது செய்கின்றது என்பது தெரிகின்றது! அது முன்னாள் தலைவன் மகளை, முன்னாள் அமைச்சரை, ஒரு எம்.எல்.ஏவினையே கதற வைக்கின்றது என்றால் நிலமையின் வீரியம் என்ன?

ஒரு பெண்ணை அதுவும் கட்சியின் அதிசீனியர் பெண்ணை கதறவைத்துவிட்டுத்தான் பெரியாசிசம், பெண் விடுதலை, இந்துமதம் பெண் அடிமைதனம் என பேசிகொண்டிருக்கின்றது அக்கும்பல்!

பெண்ணுரிமை போராளி பெரியாரிஸ்டுகள் வீரமணி, சுபவீ, சகோதரி அருள்மொழி இப்பொழுது வாயை திறக்கட்டும் பார்க்கலாம்? ஒரு பெண்ணுரிமை போராளி பேசுவார்கள்? திருமா பேசுவாரா? நிச்சயம் மாட்டார்!

மனுதர்மம் எங்கே இருக்கின்றது? நிச்சயம் அறிவாலயத்தில்தான் இருக்கின்றது! சரி, அனிதா என்றதும் குழிக்குள் சிறுவன் விழுந்தான் என்றதும் சாத்தான்குளம் என்றதும் ஓடிய கருணாநிதி குடும்பம் இப்பொழுது அமைதி ஏன்?

poongothai
poongothai

உழைத்த கட்சிக்காரி செத்தால் வரமாட்டார்கள் ஆனால் எங்கோ யாரோ என்றால் ஓடுவார்களா? தா.கிருட்டினன் முதல் எத்தனையோ பேரை தன் சொந்த நலனுக்காக பலிகொடுத்த கட்சி இப்பொழுது பூங்கோதையின் கழுத்தையும் நெறிக்கின்றது

இது அதிர்ச்சியுமல்ல, ஆச்சரியுமல்ல அவர்கள் இயல்பு. இப்பக்கம் மிக மூத்த கட்சி பெண்மணியினை தெருவில் திமுக கதற வைக்கின்றது, அப்பக்கம் பாஜக பெண்களை கவர்னராக, நிதி அமைச்சராக, கட்சி தலைவராக இன்னும் பல கவுரவமான பொறுப்புகளை கொடுத்து உயர்த்துகின்றது

எங்கே இருக்கின்றது பெண் சுதந்திரம்?, எங்கே இருக்கின்றது பெண் அடிமைதனம்? என்பதை இனியும் விளக்கி சொல்ல அவசியமில்லை! ஒரு விஷயதோடு முடிக்கலாம், கோஷ்டி சேரும் கட்சி எதுவும் உருப்படாது. கோஷ்டிகள் அடித்து கொள்ளும் கட்சி நாசமாய் போகும்!

உதாரணம் காங்கிரஸ், மிக சிறந்த உதாரணம் தமிழக காங்கிரஸ். திமுகவும் அதே நிலைக்கு வந்தாயிற்று! சகோதரி பூங்கோதை, தென்னக அடையாளம், பாரதி கண்ட பெண்விடுதலையின் முகம். அவர் விரைவில் நலம்பெற்று வர பிரார்த்தனைகள்!

குற்றால நாதனும் , தென்காசி நாதனும், நெல்லையப்பரும் திருசெந்தூர் முருகனும் அவருக்கு நலம் அருளி மீட்டு வரட்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories