சித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி?! காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’!

chitra

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில், சித்ரா, தனது தந்தையிடம் பேசிய ஆடியோ மூலம் அவரது கணவர் ஹேமநாத்தை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நடிகை சித்ராவின் மொபைல் போனில் பதிவாகியிருந்த ஆடியோ பதிவுகள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை அடுத்து இந்த விவகாரத்தில் ஏதோ மறைக்க முயல்வது தெரியவந்தது.

சின்னத்திரை நடிகை சித்ரா, சென்னை பூந்தமல்லி அருகே நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த வாரம் தற்கொலை செய்து கெண்டார். அவரது தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்ட நசரத்பேட்டை காவல் துறையினர், அவருடன் தங்கி இருந்த அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்து பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர்.

பதிவுத் திருமணம் மட்டுமே செய்து கொண்டு, இன்னமும் பெரிய அளவில் திருமணம் செய்வதற்கான நாள் குறித்து காத்துக் கொண்டிருந்தார் சித்ரா. இவருக்கும், ஹேம்நாத்துக்கும் பதிவுத் திருமணம் ஆகி நான்கு மாதமே கடந்த நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால், ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது. சித்ரா தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ., ஹேம்நாத்தின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார். மேலும் ஹேம்நாத்திடமும் விசாரணை நடத்தவுள்ளார்.

chitra

இந்நிலையில் சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் போலீஸார், திடுக்கிடும் தகவல் ஒன்றைக் கூறியுள்ளனர். தன்னை தினந்தோறும் சந்தேகப்பட்டு மிகவும் கேவலமான வார்த்தைகளால் ஹேம்நாத் காயப் படுத்தி வருவதாக ஹேம்நாத்தின் தந்தையிடமும் சித்ரா புலம்பியுள்ளார். சித்ரா தற்கொலை செய்து கொண்ட நிலையில், சித்ராவின் மொபைல் போனில் இருந்த தகவல்களை ஹேம்நாத் அழித்துள்ளார். ஆனால் அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று ஹேம்நாத் தொடர்ந்து போலீஸாரிடம் கூறி வந்துள்ளார். இதனால், அவர் மீதான சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

எனவே சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் சித்ராவின் மொபைல் போனில் இருந்த ஆடியோ பதிவுகள், தொடர்பு எண்கள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டன. அவற்றில், ஹேம்நாத்தின் தந்தையுடன் சித்ரா பேசிய ஆடியோ பதிவும் கிடைத்துள்ளது.

அதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories