December 6, 2025, 11:33 AM
26.8 C
Chennai

UPI Lite: no net connection.. அறிமுகப்படுத்தும் NPCI!

upi - 2025

சிறிய அளவிலான பணப்பரிமாற்றத்தை மொபைலில் இன்டர்நெட் இல்லாமல் செய்யும் “யுபிஐ லைட்”(upilite) எனும் செயலியை தேசிய பேமெண்ட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா(NPCI) அறிமுகப்படுத்த உள்ளது.

பணப்பரிமாற்றத்தை எளிமைப்படுத்தவும், வங்கி செயல்பாட்டு முறைக்கு இருக்கும் அழுத்தத்தை குறைக்கவும் இந்த யுபிஐ லைட் கொண்டுவரப்பட உள்ளது.

இதுகுறித்து எபிசிஐ வங்கிகளுக்கு விடுத்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மொபைல் போனில் இன்டர்நெட் வசதியில்லாத ஆஃப்லைன் மோடில் பணத்தை டெபிட் செய்யவும், இன்டர்நெட் இணைப்புடன் பணத்தை கிரெடிட் செய்யவும் யுபிஐ லைட் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை முயற்சி சிறப்பான முடிவுகளைத் தரும்பட்ச்தில் பணத்தை பெறுதல், பணத்தை அனுப்புதல் இவை இரண்டையும் ஆஃப்லைனில் அதாவது இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் செய்ய முடியும்.

முதல்கட்டமாக யுபிஐ லைட் செயலி பரிசோதனை முயற்சியாக பல்வேறு வங்கிகளுடன் கூட்டாக இணைந்து அறிமுகப்படுத்தப்படும்.

இந்த பரிசோதனை முயற்சியில் வங்கிப்பரிமாற்றம் சிக்கலின்றி அமைந்துவிட்டால் வர்த்தகரீதியான அறிமுகம் முறைப்படி தொடங்கும்

இன்டர்நெட் இல்லாமல் பரிமாற்றம் செய்யும்போது அதிகபட்சமா ரூ.200 வரை மட்டுமே அனுப்ப முடியும். ஆன்-டைவைஸ் வேலட்டில் அதிகபட்சமாக ரூ.2ஆயிரம் வரை மட்டுமே பணம் வைக்க முடியும்.

upi 1 - 2025

யுபிஏ பேமெண்ட் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தியவகையில் 75சதவீத சில்லரை பரிமாற்றத்தின் மதிப்பு இந்தியாவில் ரூ.100க்கும் கீழாகத்தான் இருக்கிறது. இதனால், யுபிஐ பரிமாற்றத்தின் மதிப்புரூ.200ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ லைட்டை ஒருவர் மொபைல் போனில் பதிவேற்றம் செய்துவிட்டால், அவரின் வங்கிக்கணக்கிலிருந்து வாலட்டுக்கு ரூ2ஆயிரம்வரை வைக்கலாம்.

இந்தப் பணத்தை வங்கிக்கணக்கிலிருந்து வாலட்டுக்கு மாற்றும்போது மொபைலில் இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும். ஆனால், பணம் அனுப்பும்போது, இன்டர்நெட் தேவையில்லை.

யுபிஐ லைட் செயலி கூடுதல் பாதுகாப்புவசதி அதாவதுஓடிபி வசதியுடனும், பின்நம்பர் இல்லாமல் பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டிருக்கும்.

அதாவது செல்போனில் இருக்கும் பயோமெட்ரிக் முறை, செயலிக்கான பாஸ்வேர்ட் ஆகியவற்றை வைத்து பணம் அனுப்ப முடியும்.

ஒருவேளை பணம் அனுப்பும்போது, ஓடிபி வசதியுடன் பாதுகாப்பாக அனுப்ப வேண்டுமென்றால் இன்டர்நெட் வசதியை அதாவது டேட்டாவை ஆன் செய்து, ஒடிபி பெற்று அனுப்பலாம். ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு யுபிஐ பேமெண்ட் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. 2022, பிப்ரவரி மாதம் வரை 452.74கோடி பேமெண்ட் நடந்துள்ளது,

இதன் மதிப்பு ரூ.8.26 லட்சம் கோடியாகும். அடுத்த 5 ஆண்டுகளில் தினசரி100 கோடி பரிமாற்றம் நடக்க வேண்டும் என்பதை என்பிசிஐ இலக்காக வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories