தேனீக்கள் போல் எப்போதும் சுறுசுறுப்பாக செயல் படுவோம்..

உலகம் முழுவதும் இன்று மே20 இல் உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

சுறுச்சுறுப்புக்கு உதாரணமாக சொல்லப்படும் தேனீக்கள் இயற்கையை சமநிலையாக வைத்துக்கொள்வதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. தேனீக்கள் பெருங்கூட்டமாக வாழ்கின்றன. தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதாகும்.
ஒரு பவுண்டு தேன் சேகரிக்க தேனீக்கள் இருபது லட்சம் பூக்களிலிருந்து தேனை சேகரிக்க வேண்டும்.சிறுபூச்சி இனத்தைச் சேர்ந்த இந்த தேனீக்கள் ஆண்டுக்கு 1 லட்சம் கி.மீ தூரம் பயணம் செய்து தன்னுடைய உணவுத் தேவைக்காக பூக்களில் இருந்து அவை தேனை எடுக்கின்றன.ஒரு பவுண்டு தேன் தயாரிக்க ஒரு தேனீ சுமார் 14 லட்சம் கிலோ மீட்டர் பறக்க வேண்டும். அதாவது உலகம் முழுவதும் மூன்று முறை சுற்றுவதற்கு சமம்.
தேனீக்களின் மூளை ஓவல் வடிவத்தில் எள் விதையின் அளவில் இருக்கும். ஆனால் இந்த சிறு மூளை அது செல்லும் இடங்களில் உள்ள எல்லா விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் நினைவில் வைத்து கொள்வதற்கும் ஏற்ற திறனைக் கொண்டுள்ளது.

தேனீக்கள் ஒருவித நடன அசைவு மூலம் ஒன்றுக்கொன்று தகவல்களை பரிமாறிக்கொள்கிறது.ஆண்டுக்கு 1 லட்சம் கி.மீ தூரம் பயணித்து தன்னுடைய உணவுத் தேவைக்காக தேனீ பூக்களில் இருந்து தேனை எடுக்கிறது என்றாலும், அதன் மூலம் அதிகம் பயனடைவது என்னவோ மனிதகுலம்தான். தேன் மூலம், ஒவ்வொரு நாடும், பல கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்ட உதவுவதோடு, அது மருத்துவ பொருளாகவும் திகழ்கிறது. தேனீக்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி மனித வாழ்க்கைக்கும் பேருதவியாக இருக்கிறது. குறிப்பாக விவசயிகளுக்கு இவை செய்யும் உதவி அளப்பரியது. தேனீக்களின் வாழ்க்கை முடிகிறதெனில் மனிதர்களுக்கான அழிவும் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனானது பல விதங்களில் சித்த மருத்துவத்தில் மருந்தாகவும் மனிதர்களுக்கு பல வகையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தேனில் உள்ள இயற்கையான இனிப்பு சுவை, பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை உடலுக்கு எளிதில் ஜீரண சக்தியை கொடுக்கிறது. இதனால்தான் விளையாட்டு வீரர்கள் மற்றும் அத்தலெட்ஸ் இயற்கையான ஆற்றல் ஊக்கத்தை பெற தேனை பயன்படுத்துகிறார்கள்.

சுமார் 150 மில்லியன் ஆண்டுகளாக தேனீக்கள் தேனை உற்பத்தி செய்ய ஒரே வழியை தான் பயன்படுத்துகின்றன.தேன் குறைப்பாடு வரும் போது ஆண் தேனீக்களை வேலைக்கார தேனீக்கள் விரட்டி விடுமாம். மீண்டும் ஆண் தேனீக்கள் தேவைப்பட்டால் ராணி தேனீ உருவாக்கி கொள்ளுமாம்.ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று அழிந்து வரும் தேனீக்களை பாதுகாக்க உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தேனீக்கள் பெருக்கத்துக்கு வழிசெய்வோம்.தேனீக்கள் போல் எப்போதும் சுறுசுறுப்பாக செயல் படுவோம்.

images 2022 05 20T142238.826 - 2026
images 2022 05 20T141117.653 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories