December 5, 2025, 8:29 PM
26.7 C
Chennai

உபதேச பலன் எப்போது கிடைக்கும்?

sringeri swamigal - 2025

வேதாந்தத்தின் தத்துவத்தை புரிந்து கொள்வதற்கு தன்னை அதற்கு தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு தகுதி ஏற்படாதவனுக்கு உபதேசத்தால் பயன் கிடைக்காது; மாறாக எதிரிடையான விளைவுகளே ஏற்படும்.

எல்லாமே பிரஹ்மம் என்று ஒரு மூடனுக்கோ அரைகுறையாக படித்திருக்கிறவனுக்கோ உபதேசித்தால், அவன் அதை தப்பாக புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் அவனை அந்த உபதேசம் தவறான செயல்கள் மூலம் நரகத்திற்கு அழைத்துச் செல்லும். ஆகவே தத்துவத்தை பெற்றுக் கொள்வதற்கும் ஒருவனுக்கு தகுதி இருக்க வேண்டும்.

அப்பொழுது அந்த தகுதிதான் என்ன? சாஸ்திரங்களிலும் குருவின் உபதேசங்களிலும் அசையாத நம்பிக்கை, லௌகீக விஷயங்களில் விரக்தி, ஆசையின்மை மற்றும் பகவானிடம் அஸாதாரண பக்தி ஆகியவை ஒருவனை தகுதியுள்ளவனாக்கும்.

ஆதலால், முதலாக இந்த குணங்களை வளர்க்க வேண்டும். இந்த முயற்சியில் ஒருவன் வெற்றி பெற்று, தன்னை தயாராகிக் கொண்டால் மட்டுமே அவனுக்கு வேதாந்த தத்வத்தை உபதேசிக்க முடியும்.

பழைய காலத்தில், ஒருவன் தத்துவோபதேசத்துக்காக குருவை அணுகினால், குரு அதற்கு அவன் தயாராக இருக்கிறானா என்று சோதித்துவிட்டு, அவன் தயார் நிலையில் உள்ளான் என்று உறுதியான பின் தான் அவனுக்கு உபதேசம் செய்வதுண்டு.

ப்ரசினோபநிஷத்தில், ஆறு சிஷ்யர்கள் (ஸுசேகர், சத்யகாமர் மேலும் சிலர்) குரு பிப்பலாதரை சிக்ஷையாரம்பத்திற்காக அணுகினார்கள். ஆனால் குரு அவர்களை தன்னிடம் வருவதற்கு முன் மற்றும் ஒரு வருடம் தபஸ் செய்ய போகவேண்டும் என்று உத்தரவிட்டார். காரணம் என்னவென்றால், அவர்கள் உபதேசத்திற்கு முற்றிலும் தயார் நிலையில் இருப்பதை உறுதிபடுத்த விரும்பினார். ஒரு வருடம் கழித்த பின் குரு அவர்களுக்கு உபதேசம் அளித்தார். அவர்களும் தத்துவத்தை நன்கு புரிந்துகொண்டு முக்தி அடைந்தார்கள்.

ஆதலால் தத்துவத்தை கற்றுக்கொள்வதன் முன் தேவைகளை எல்லாம் சரியாக கருத்தில் கொண்டு வேண்டிய தகுதியை அடைந்ததற்கு பின் குருவிடமிருந்து வேதாந்தம் பற்றிய உபதேசத்தைப் பெற்று கொள்வது தான் சரியானது. இதன் மூலம் எல்லோரும் குறைவற்ற வாழ்க்கையை நடத்த முடியும்.

தக்ஷிணாம்னாய சிருங்கேரி சங்கராசார்ய ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories