சரவெடி தடையை நீக்க சட்டப்படி நடவடிக்கை: எல்.முருகன் உறுதி!

l murugan in sivakasi fireworkers - 2026
#image_title

சரவெடி தடையை‌ நீக்க சட்டப்படி தீர்வு காண வழிவகை செய்யப்படும் என‌ சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களிடையே கலந்துரையாடிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உறுதி அளித்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரியில்‌ உள்ள தனியார் பட்டாசு ஆலை தொழிலாளர்களுடன் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கலந்துரையாடினார்.

முன்னதாக அவரை ஆரத்தி எடுத்து பட்டாசு தொழிலாளர்கள் வரவேற்றனர். கலந்துரையாடலின் போது,பெண் பட்டாசு தொழிலாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி,கிராமப்புற ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் 3 கோடி வீடுகளும்,வரும் 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி வீடுகளும் கட்டிக்கொடுக்க உத்திரவிட்டுள்ளதாகவும், அதிலும் குறிப்பாக வீட்டின் பட்டா தாய்மார்கள் பெயரில் இருக்க வேண்டும் என உத்திரவிட்டுள்ளார் என்றார்.

தாய்மார்கள் தன்னிரைவோடு இருக்க வேண்டும்‌சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்துகிறார் என்றும் பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை உணர்ந்து தான் பிரதமர் இவ்வாறு உத்தரவிட்டதோடு,பெண்களுக்கு வீட்டுக்கு வீடு ஜல்ஜீவன் திட்டம், இலவச கேஸ் சிலிண்டர்,தனிநபர் கழிப்பறைகளையும் கட்டிக்கொடுத்துள்ளார். மேலும் 5 கிலோ அரிசி,1 கிலோ பருப்பும் ரேஷன் கடை மூலமாக தருகிறார் என்றார்.

பட்டாசு தொழிற்சாலையில் வேலைபார்ப்பவர்களுக்கு ஈ.எஸ். ஐ கார்டு மற்றும் மருத்துவ வசதியுடன் பென்ஷன் வசதியும் பிரதமர் செய்து கொடுத்துள்ளார் என்றார்.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

தீபாவளி சீசன் நேரம் இது உங்களை பார்த்து வாழ்த்துவிட்டு,பிரதமரின் பல திட்டங்களை தங்களிடத்தில் சொல்ல வந்தேன். தங்களை சந்தித்தது மகிழ்ச்சி என்றார்.

இந்த கலந்துரையாடலின் போது பட்டாசு தொழிலில் சரவெடிக்கு தடை விதிக்கப்பட்டது குறித்தும் தங்களுக்கு அந்த தொழிலை தவிர வேறு தொழில் தெரியாது என தொழிலாளர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், மத்திய அரசு தொழிலாளர்கள் பக்கம் இருந்து இதை சட்டப்படி தீர்வு காண வழிவகை செய்யும் என உறுதியளிந்தார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வின் முடிவில் மத்திய அமைச்சருடன் பட்டாசு தொழிலாளர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories