எவ்ளோ தெளிவா செஞ்சோம்… இப்டி பிரியாணி கடைல உட்கார வெச்சிட்டீங்களேடா…!

Published:

stalin anbu briyani - 2026

சர்காரியா கமிஷன் விசாரணை – 27 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை திருடி விற்றுள்ளார் என்று வாதம் நடந்து கொண்டு இருக்கிறது.

27 ஆயிரம் சர்க்கரை மூட்டைகள் எங்கு போனது?

கூலாக பதில் சொல்கிறார், எறும்புகள் தின்றுவிட்டது என.

நீதீபதியும், வழக்கறிஞரும் வாயைடைத்து போய்விடுகிறார்கள்.

ஒருவாரகாலம் வழக்கு தள்ளி வைக்கபடுகிறது.

27 ஆயிரம் மூட்டை சர்க்கரை ஏழை எளிய மக்களுக்கு செல்லவேண்டியது.
திருடி விற்றுள்ளார்கள். எப்படியாவது தண்டனை பெற்றே கொடுக்க வேண்டும் என
நீதிபதிக்கு மனக் குமுறல்.

அரசு வழக்கறிஞரை கூப்பிட்டு ரகசியமாக பேசுகிறார்.
ஒரு ஊழல்வாதி தப்பிக்கவே கூடாது. இந்த கேள்வியை கேள். அவங்க மாட்டிக் கொள்வார்கள். தண்டனை கொடுத்துவிடலாம் என்கிறார்.

வழக்கு அடுத்தவாரம் விசாரணைக்கு வருகிறது. வக்கீல் கேட்கிறார் 27 ஆயிரம் மூட்டை சர்க்கரையும் எறும்பு தின்றதா என்று ஆமாம் என்கிறார்.

அப்படி என்றால் அந்த 27 ஆயிரம் கோணிகள் எங்கே என்று கேட்கிறார். யோசிக்காமல் பதில் சொன்னார்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

“அந்த 27 ஆயிரம் கோணிகளை கரையான் தின்ற பிறகே சர்க்கரையை எறும்புகள் தின்றன” என்று.”

வழக்கறிஞர் இதயத்தை ஒரு கையால் பிடித்துக்கொண்டு அமைதியாக தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு நீதிபதியை பார்த்தார். நீதிபதியின் முகத்தில் ஈ ஆடவில்லை.

உடனே பேனாவை எடுத்தார் ஊழல் நடந்துள்ளது. அது விஞ்ஞானபூர்வமான ஊழல். நிருபிக்க முடியாததால் விடுதலை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு மன வேதனையுடன் சென்றுவிட்டார் அந்த #உயர்ந்த மனிதர்.

எவ்வளவு தெளிவா பண்ணோம் கடைசியில பிரியாணி கடையில உக்காரவச்சிட்டீங்களேடா…

#சமூக_வலைத்தளப்_பகிரல்

Related articles

Recent articles

spot_img