spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஅதிபயங்கர குண்டுகள் வெடித்தும்... நிலவுவது நிசப்தம் மட்டும்!

அதிபயங்கர குண்டுகள் வெடித்தும்… நிலவுவது நிசப்தம் மட்டும்!

- Advertisement -

இலங்கையில் கிருஸ்த்துவ தேவாலயத்தில் கிருத்துவர்கள் மீதான இஷ்லாத்தின் ISIS கொடூரசெயலுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க தயங்குவதேன்?
பயம் மட்டுமே

அமைதியை விரும்பும் இந்துக்களை தான் இவர்களால் ஏமாற்ற முடியும்.

முதல் முறையாக ஒரு பெருத்த குண்டு வெடிப்பு ஒரு பெரிய நிசப்தத்தை உருவாக்கி இருக்கிறது. விந்தை!

அரசியல் நிசப்தம் அது.

திராவிட அரசியல் தமிழர்களுக்கு எதிரானது என்று தெரியும், ஆனால் இயற்பியலுக்கும் எதிர் என்று இப்போது புரிகிறது. வெடிக்கும் வெடி குண்டு நிசப்தத்தை உண்டாக்குகிறது, தமிழ் மண்ணின் திராவிட அரசியலில்.

ஒரு ஜீயர், தான் வணங்கும் தெய்வத்தை, ஒரு கபோதி கலங்கப்படுத்த முனைந்த போது, கோபத்தில் “எங்களுக்கும் கல் வீச தெரியும்” (which I doubt) என்று சொன்னதை தெருவுக்கு தெரு மேடை போட்டு “பார்த்தாயா பார்பனீயத்தை” என்று வீரத்தை காட்டியவர்கள்…

இன்று 350+ உயிர்களை பலி வாங்கிய வஹாபிய கும்பலைப் பற்றி ஏதும் சொல்லாமல் அமைதி காப்பது நமக்கு புதிதில்லையே.

H.ராஜா போன்றவர்கள் “கோர்ட்டாவது” என்று பேசியபோதும், மற்றவர் வெறும் வார்த்தையாக பேசும் போதும் கூட அதை நுகர்ந்து பாத்து “இது பார்ப்பனீயம்” என்று பெரிது படுத்தும் திருமா, வைகோ, ஸ்டாலின் போன்றவர்கள் இந்த துருப்பிடித்த வகாபிய ஆணியை விழுங்கி செரித்துக் கொள்வது அவர்களின், இந்த இழிபிறவிகளின், பின்புலத்தை வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றது.

ஒரு திராவிட வஹாபியக் கவிஞன் “யேசுவின் மீது ரத்தம்” என்று வருந்தி கவிதை எழுதுகிறான். அந்த ரத்தம் அவன் பேனாவில் மை வடிவில் ஒளிந்து கொண்டிருந்ததை ஏனோ மறைத்து விட்டான்.

“மனுஷ்யபுத்ரனே”, உன் பேனாவின் மை தான் அந்த ரத்தம் என்பதை உணர்வாயா?

தமிழ் ஊடகங்களோ இந்த தீவிரவாத செயலை “பர்தா” போட்டு மூடி மறைக்கின்றன. என்ன கொடை வாங்கினார்களோ, இந்த தீவிரவாதத்தை, “இஸ்லாமிய தீவிரவாதம்” என்ற கறை படியாமல் குடை பிடிக்கிறார்கள்.

வகாபியர்களும் மிஷநரிகளும் தமிழ்நாடெங்கும் கண்ணிவெடிகளை பரப்பி வைத்து இருக்கிறார்கள். கால் படாமல் இன்று நான் நடப்பேன்.
ஆனால் நாளை?

என் வருங்கால தமிழ் சந்ததி எப்படி இதை எதிர்கொள்ளும்?

இதே வஹாபியர்கள் கோவை மண்ணில் இதை செய்து காண்பித்த போது, “ச்சே ச்சே, அவங்க அமைதி மார்க்கம், இதையெல்லாம் செய்ய மாட்டாங்க” என்ற இந்த சமுதாயம் இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்கிறதோ?

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இப்பயெல்லாம் ரொம்ப பயமா இருக்கு பாரதி.

-ச. சண்முகநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe