எழுத்தாளர் கி.அ. சச்சிதானந்தம் காலமானார்!

ki-a-sachithanandam1
ki-a-sachithanandam1

அக்.03 காலை கொரோனாவால் காலமான முதுபெரும் எழுத்தாளர் கி.ஆ. சச்சிதானந்தம் (83) பீக்காக் பதிப்பகம் என்ற பதிப்பகத்தை நடத்தி வந்தார். அந்தப் பதிப்பகத்தின் மூலம் சி.சு. செல்லப்பாவின் பல நூல்களை வெளியிட்டார்.

மெளனியின் சிறுகதைகளைத் தொகுத்து அழியாச் சுடர் என்ற தலைப்பில் முதன்முதலில் வெளியிட்டவர் அவரே. மெளனி பற்றித் தாமே ஒரு நூல் எழுதியுள்ளார். மெளனியுடன் நெருங்கிப் பழகியவர்.

இலக்கிய இதழ்கள் பலவற்றைச் சேகரித்து வைத்திருந்தார். நடை, இலக்கிய வட்டம் ஆகிய சிற்றிதழ்களைத் தொகுத்திருக்கிறார். ஏராளமான புத்தகங்களும் அவரின் சேகரிப்பில் இருந்தன.

சிறுகதைகள் குறுநாவல்கள் எழுதிவந்தார். அவரது குறுநாவல் தொகுப்பொன்று வெளிவந்துள்ளது.

சிறந்த மொழிபெயர்ப்பாளர். சாமுவேல் பெக்கட் எழுதிய நோபல் பரிசுபெற்ற வெயிட்டிங் ·பார் கோடோ என்ற புகழ்பெற்ற நாடகத்தைத் தமிழில் கோடோவிற்காகக் காத்திருத்தல் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். தாகூரின் சில படைப்புகளையும் மராட்டிய நாடகங்கள் சிலவற்றையும் மொழிபெயர்த்தவர்.

ki-a-sachithanandam
ki-a-sachithanandam

நிரம்பப் படித்தவர். உலக இலக்கியங்கள் குறித்து சுவாரஸ்யமாக உரையாடக் கூடியவர். எல்லா இலக்கியக் கூட்டங்களுக்கும் தோளில் ஒரு ஜோல்னாப் பையோடு வருகை புரிவார். சாகித்ய அகாதமி நடத்தும் கூட்டங்கள் எதையும் அவர் தவறவிட்டதில்லை.

சி.சு. செல்லப்பா வீட்டில் அவரை நிறையச் சந்தித்திருக்கிறேன். அமுதசுரபி இதழ்களிலும் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. பல்லாண்டு காலமாகத் தொடர்புடைய ஒரு நண்பரைக் கொரோனா எடுத்துச் சென்றுவிட்டது.

  • திருப்பூர் கிருஷ்ணன் (ஆசிரியர், அமுதசுரபி)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories