‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மறைவு!

kriya-ramakrishnan-ksr
kriya-ramakrishnan-ksr

இன்று அதிகாலை 5 மணிக்கு நண்பர் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் மறைவு! ஆழ்ந்த இரங்கல்!

க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. அவருடைய பதிப்பகம் ராயப்பேட்டை ஸ்வாகத் ஓட்டல் அருகே உள்ள மாடியில் இருந்தபோது. அதாவது 1980லிருந்து நட்புடனும் அன்புடனும் நண்பர் திலீப் குமாருடன் அங்கு இயங்கினார்.

நேற்று தான் மூன்றாவது பதிப்பு அகராதி கிடைக்கப் பெற்றேன். இன்று அவர் மறைவு. உ.வே.சா போல் தனது பதிப்பு பணியில் திறம்பட இயங்கினார். தமிழகத்திற்கு அவர் அளித்த இலக்கிய படைப்பு  பணிகள் ஏராளம். நல்லவர்களுக்கு எல்லாத் தளத்திலும் இப்படி சோதனை வருகிறது என்ன சொல்ல. நல்லது செய்தால் நல்லது வரும் என்றால் அந்த கணக்கு தப்புதே. யாரே யாரே, அயோக்கியர்களை உச்சத்தில் வைத்து மக்கள் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றனர். ராமகிருஷ்ணன் போன்ற அமைதியான ஆளுமைகளை நாம் சரியாக கொண்டாடவில்லை. இந்தநிலையில் ஆழ்ந்த இரங்கல் தான் சொல்ல முடியும். 

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

தொற்று நோயிலும் அகராதிகள் தொகுக்கும் பணிகளை செய்துவிட்டுத் தான் சென்றிருக்கிறார். தொற்று அவரை படாதபாடு படுத்தியிருக்கிறது. நல்ல நண்பர் எப்போதும் அழைத்துப் பேசுவார். அவரின் இறப்பு செய்தியைக் கேட்டவுடன் வெறுமையாக ஆனேன்.

தினமணியில் வெளிவந்த என்னுடைய 500க்கு மேலான கட்டுரைகள் அடங்கிய நூலை வெளியிட வேண்டும் என்று விரும்பினார்..என் வாழ்வில் அது ஒரு நல்ல அங்கீகாரம் என்று நினைத்தேன்.அது நிறைவேறாமல் போனது வருத்தமளிக்கிறது.

க்ரியா வெளியிட்ட மொழிபெயர்ப்புகள் நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள் அதிகம்.காம்யுவின் ‘ அன்னியன்’, சார்த்தரின் ‘ மீள முடியுமா?’, ழாக் ப்ரவரின் ‘ சொற்கள்’ என எத்தனை படைப்புகள் தமிழ் வாசகனுக்குள் புதிய பரிமாணத்தைஉண்டாக்கின. ஐராவதம் மகாதேவன்,சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன். அசோகமித்திரன்,  ந.முத்துசாமி துவங்கி இமையம் வரையிலான தமிழின் முதன்மையான படைப்பாளிகளின் நூல்களை செம்மையாக பதிப்பித்த வரலாறு க்ரியாவுக்கு உண்டு. ஒரு படைப்பை செம்மைப்படுத்தி மேம்படுத்துவதில் கடும் உழைப்பையும் கவனத்தையும் அவர் மேற்கொண்டார்

க்ரியா  தமிழ்  அகராதி தமிழ்க்கு கிடைத்த அரிய அருட்கொடை! 

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

 20-1-2019 – சென்னை புத்தகக் கண்காட்சியின்  கடைசி நாள்.க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களைச்  சந்தித்து  பல விஷயங்களைப்  பேச  வாய்ப்புக்  கிடைத்தது. ஆர்.கே. நாராயணனின் மால்குடி டேஸ்  ஆங்கிலபுத்தகத்தை  தமிழில் பதிப்பித்துள்ளதாகக்  கூறி  என்னிடம்  வழங்கினார்.

க்ரியா  தமிழ்  அகராதி   2020ல் அடுத்த பதிப்பை புதுப் பொலிவுடன்  கொண்டு வர இருக்கிறோம் என்றார்.  பதிப்புப் பணிக்கான  நபர்கள்  கிடைப்பதில்  உள்ள  சிரமங்களையும்  மிகுந்த  ஆதங்கத்துடன்  எடுத்துரைத்தார்.  ராமகிருஷ்ணனின் தனி மனித  நிர்வாக உழைப்பிலேயே  க்ரியா  தமிழ்  அகராதியை  கொண்டு  வந்துள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்க  விசயமாகும்.

ஜனவரி 1992 இதன் முதல் பதிப்பு(அன்றைய விலை ரூ200/) வந்தவுடன் வாங்கி பொங்கல் பரிசாக  ஈழத்தில் இருந்த அன்பு சகா #பிரபாகரன் அவர்களுக்கு அனுப்பினேன். அவரும் இது அற்புதமான பணி. க்ரியா பதிப்பகத்திற்கு பாராட்டுகளையும் தெரிவித்தார் 

க்ரியா  தமிழ்  அகராதி தமிழ்க்கு கிடைத்த அரிய அருட்க்கொடை!

  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories