December 5, 2025, 8:08 PM
26.7 C
Chennai

‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மறைவு!

kriya-ramakrishnan-ksr
kriya-ramakrishnan-ksr

இன்று அதிகாலை 5 மணிக்கு நண்பர் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் மறைவு! ஆழ்ந்த இரங்கல்!

க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. அவருடைய பதிப்பகம் ராயப்பேட்டை ஸ்வாகத் ஓட்டல் அருகே உள்ள மாடியில் இருந்தபோது. அதாவது 1980லிருந்து நட்புடனும் அன்புடனும் நண்பர் திலீப் குமாருடன் அங்கு இயங்கினார்.

நேற்று தான் மூன்றாவது பதிப்பு அகராதி கிடைக்கப் பெற்றேன். இன்று அவர் மறைவு. உ.வே.சா போல் தனது பதிப்பு பணியில் திறம்பட இயங்கினார். தமிழகத்திற்கு அவர் அளித்த இலக்கிய படைப்பு  பணிகள் ஏராளம். நல்லவர்களுக்கு எல்லாத் தளத்திலும் இப்படி சோதனை வருகிறது என்ன சொல்ல. நல்லது செய்தால் நல்லது வரும் என்றால் அந்த கணக்கு தப்புதே. யாரே யாரே, அயோக்கியர்களை உச்சத்தில் வைத்து மக்கள் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றனர். ராமகிருஷ்ணன் போன்ற அமைதியான ஆளுமைகளை நாம் சரியாக கொண்டாடவில்லை. இந்தநிலையில் ஆழ்ந்த இரங்கல் தான் சொல்ல முடியும். 

தொற்று நோயிலும் அகராதிகள் தொகுக்கும் பணிகளை செய்துவிட்டுத் தான் சென்றிருக்கிறார். தொற்று அவரை படாதபாடு படுத்தியிருக்கிறது. நல்ல நண்பர் எப்போதும் அழைத்துப் பேசுவார். அவரின் இறப்பு செய்தியைக் கேட்டவுடன் வெறுமையாக ஆனேன்.

தினமணியில் வெளிவந்த என்னுடைய 500க்கு மேலான கட்டுரைகள் அடங்கிய நூலை வெளியிட வேண்டும் என்று விரும்பினார்..என் வாழ்வில் அது ஒரு நல்ல அங்கீகாரம் என்று நினைத்தேன்.அது நிறைவேறாமல் போனது வருத்தமளிக்கிறது.

க்ரியா வெளியிட்ட மொழிபெயர்ப்புகள் நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள் அதிகம்.காம்யுவின் ‘ அன்னியன்’, சார்த்தரின் ‘ மீள முடியுமா?’, ழாக் ப்ரவரின் ‘ சொற்கள்’ என எத்தனை படைப்புகள் தமிழ் வாசகனுக்குள் புதிய பரிமாணத்தைஉண்டாக்கின. ஐராவதம் மகாதேவன்,சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன். அசோகமித்திரன்,  ந.முத்துசாமி துவங்கி இமையம் வரையிலான தமிழின் முதன்மையான படைப்பாளிகளின் நூல்களை செம்மையாக பதிப்பித்த வரலாறு க்ரியாவுக்கு உண்டு. ஒரு படைப்பை செம்மைப்படுத்தி மேம்படுத்துவதில் கடும் உழைப்பையும் கவனத்தையும் அவர் மேற்கொண்டார்

க்ரியா  தமிழ்  அகராதி தமிழ்க்கு கிடைத்த அரிய அருட்கொடை! 

 20-1-2019 – சென்னை புத்தகக் கண்காட்சியின்  கடைசி நாள்.க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களைச்  சந்தித்து  பல விஷயங்களைப்  பேச  வாய்ப்புக்  கிடைத்தது. ஆர்.கே. நாராயணனின் மால்குடி டேஸ்  ஆங்கிலபுத்தகத்தை  தமிழில் பதிப்பித்துள்ளதாகக்  கூறி  என்னிடம்  வழங்கினார்.

க்ரியா  தமிழ்  அகராதி   2020ல் அடுத்த பதிப்பை புதுப் பொலிவுடன்  கொண்டு வர இருக்கிறோம் என்றார்.  பதிப்புப் பணிக்கான  நபர்கள்  கிடைப்பதில்  உள்ள  சிரமங்களையும்  மிகுந்த  ஆதங்கத்துடன்  எடுத்துரைத்தார்.  ராமகிருஷ்ணனின் தனி மனித  நிர்வாக உழைப்பிலேயே  க்ரியா  தமிழ்  அகராதியை  கொண்டு  வந்துள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்க  விசயமாகும்.

ஜனவரி 1992 இதன் முதல் பதிப்பு(அன்றைய விலை ரூ200/) வந்தவுடன் வாங்கி பொங்கல் பரிசாக  ஈழத்தில் இருந்த அன்பு சகா #பிரபாகரன் அவர்களுக்கு அனுப்பினேன். அவரும் இது அற்புதமான பணி. க்ரியா பதிப்பகத்திற்கு பாராட்டுகளையும் தெரிவித்தார் 

க்ரியா  தமிழ்  அகராதி தமிழ்க்கு கிடைத்த அரிய அருட்க்கொடை!

  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories