பிரபல ஹிந்தி, தெலுங்கு மொழிபெயர்ப்பாளர் ஆர். சாந்தசுந்தரி காலமானார்!

santhasundari
santhasundari

பிரபல மொழிபெயர்பாளர் ஆர். சார்ந்த சுந்தரி (79) கடந்த வாரம் புதன்கிழமை இரவு ஹைதராபாத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். மூளையில் ஏற்பட்ட கேன்சர் காரணமாக சில மாதங்களாக உடல்நிலை சரியின்றி சிகிச்சை பெற்றுவந்தார்.

தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட சாந்தசுந்தரி பிரபல தெலுங்கு எழுத்தாளர் கொடவடிகண்ட்டி குடும்பராவு அவர்களின் மகள். சென்னையில் பிறந்து வளர்ந்தார். அங்கேயே கல்லூரியில் படித்தார். பேராசிரியர் டாக்டர் கணேஷ்வர ராவோடு திருமணமான பின் பல ஆண்டுகள் டெல்லியில் வசித்தார். ஹிந்தி மொழி ஆசிரியராக பணிபுரிந்த சாந்தசுந்தரி பதவி ஓய்வு பெற்ற பின் ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.

சுமார் 75 பிரபலமான தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

santhaasundari2
santhaasundari2

‘இன்ட்லோ பிரேம்சந்த்’ என்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு 2014ல் மத்திய சாகித்திய அகாடமி விருது பெற்றார்.

தந்தை குடும்பராவு போலவே இவர் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுவாதியாக இருந்தார். பகுத்தறிவு நூல்களையே அதிகம் மொழிபெயர்ப்பு செய்து வாசகர்களுக்கு அளித்தார்.

பல நாவல்களையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் தெலுங்கிலிருந்து இந்திக்கும் இந்தியிலிருந்து தெலுங்குக்கும் ஆங்கிலத்திலிருந்து தெலுங்குக்கும் மொழிபெயர்த்துள்ளார். சேப்பியன்ஸ் என்ற ஆங்கில நூலை அண்மையில்தான் தெலுங்கில் மொழி பெயர்த்தார்.

சாந்தசுந்தரிக்கு இரு புதல்வியர். இருவரும் அமெரிக்காவில் உள்ளனர். மனைவியை இழந்து வருந்தும் கணேஷ்வரராவுக்கு எழுத்தாளர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். சாந்தசுந்தரியின் தாயார் வரூதினி முதியோர் இல்லத்தில் தற்போது உள்ளார். சாந்த சுந்தரியின் அந்திமக் கிரியைகள் வியாழக்கிழமை மகா பிரஸ்தானத்தில் நடந்தன.

மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளரை, சிறந்த இலக்கியப் பாலத்தை இலக்கிய உலகம் இழந்தது என்று பல எழுத்தாளர்களும் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

செய்தி: ராஜி ரகுநாதன், ஹைதராபாத்-62

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories