பிரபல ஹிந்தி, தெலுங்கு மொழிபெயர்ப்பாளர் ஆர். சாந்தசுந்தரி காலமானார்!

Published:

santhasundari
santhasundari

பிரபல மொழிபெயர்பாளர் ஆர். சார்ந்த சுந்தரி (79) கடந்த வாரம் புதன்கிழமை இரவு ஹைதராபாத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். மூளையில் ஏற்பட்ட கேன்சர் காரணமாக சில மாதங்களாக உடல்நிலை சரியின்றி சிகிச்சை பெற்றுவந்தார்.

தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட சாந்தசுந்தரி பிரபல தெலுங்கு எழுத்தாளர் கொடவடிகண்ட்டி குடும்பராவு அவர்களின் மகள். சென்னையில் பிறந்து வளர்ந்தார். அங்கேயே கல்லூரியில் படித்தார். பேராசிரியர் டாக்டர் கணேஷ்வர ராவோடு திருமணமான பின் பல ஆண்டுகள் டெல்லியில் வசித்தார். ஹிந்தி மொழி ஆசிரியராக பணிபுரிந்த சாந்தசுந்தரி பதவி ஓய்வு பெற்ற பின் ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.

சுமார் 75 பிரபலமான தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

santhaasundari2
santhaasundari2

‘இன்ட்லோ பிரேம்சந்த்’ என்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு 2014ல் மத்திய சாகித்திய அகாடமி விருது பெற்றார்.

தந்தை குடும்பராவு போலவே இவர் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுவாதியாக இருந்தார். பகுத்தறிவு நூல்களையே அதிகம் மொழிபெயர்ப்பு செய்து வாசகர்களுக்கு அளித்தார்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

பல நாவல்களையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் தெலுங்கிலிருந்து இந்திக்கும் இந்தியிலிருந்து தெலுங்குக்கும் ஆங்கிலத்திலிருந்து தெலுங்குக்கும் மொழிபெயர்த்துள்ளார். சேப்பியன்ஸ் என்ற ஆங்கில நூலை அண்மையில்தான் தெலுங்கில் மொழி பெயர்த்தார்.

சாந்தசுந்தரிக்கு இரு புதல்வியர். இருவரும் அமெரிக்காவில் உள்ளனர். மனைவியை இழந்து வருந்தும் கணேஷ்வரராவுக்கு எழுத்தாளர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். சாந்தசுந்தரியின் தாயார் வரூதினி முதியோர் இல்லத்தில் தற்போது உள்ளார். சாந்த சுந்தரியின் அந்திமக் கிரியைகள் வியாழக்கிழமை மகா பிரஸ்தானத்தில் நடந்தன.

மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளரை, சிறந்த இலக்கியப் பாலத்தை இலக்கிய உலகம் இழந்தது என்று பல எழுத்தாளர்களும் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

செய்தி: ராஜி ரகுநாதன், ஹைதராபாத்-62

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img