பிரபல ஹிந்தி, தெலுங்கு மொழிபெயர்ப்பாளர் ஆர். சாந்தசுந்தரி காலமானார்!

santhasundari
santhasundari

பிரபல மொழிபெயர்பாளர் ஆர். சார்ந்த சுந்தரி (79) கடந்த வாரம் புதன்கிழமை இரவு ஹைதராபாத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். மூளையில் ஏற்பட்ட கேன்சர் காரணமாக சில மாதங்களாக உடல்நிலை சரியின்றி சிகிச்சை பெற்றுவந்தார்.

தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட சாந்தசுந்தரி பிரபல தெலுங்கு எழுத்தாளர் கொடவடிகண்ட்டி குடும்பராவு அவர்களின் மகள். சென்னையில் பிறந்து வளர்ந்தார். அங்கேயே கல்லூரியில் படித்தார். பேராசிரியர் டாக்டர் கணேஷ்வர ராவோடு திருமணமான பின் பல ஆண்டுகள் டெல்லியில் வசித்தார். ஹிந்தி மொழி ஆசிரியராக பணிபுரிந்த சாந்தசுந்தரி பதவி ஓய்வு பெற்ற பின் ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.

சுமார் 75 பிரபலமான தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

santhaasundari2
santhaasundari2

‘இன்ட்லோ பிரேம்சந்த்’ என்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு 2014ல் மத்திய சாகித்திய அகாடமி விருது பெற்றார்.

தந்தை குடும்பராவு போலவே இவர் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுவாதியாக இருந்தார். பகுத்தறிவு நூல்களையே அதிகம் மொழிபெயர்ப்பு செய்து வாசகர்களுக்கு அளித்தார்.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பல நாவல்களையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் தெலுங்கிலிருந்து இந்திக்கும் இந்தியிலிருந்து தெலுங்குக்கும் ஆங்கிலத்திலிருந்து தெலுங்குக்கும் மொழிபெயர்த்துள்ளார். சேப்பியன்ஸ் என்ற ஆங்கில நூலை அண்மையில்தான் தெலுங்கில் மொழி பெயர்த்தார்.

சாந்தசுந்தரிக்கு இரு புதல்வியர். இருவரும் அமெரிக்காவில் உள்ளனர். மனைவியை இழந்து வருந்தும் கணேஷ்வரராவுக்கு எழுத்தாளர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். சாந்தசுந்தரியின் தாயார் வரூதினி முதியோர் இல்லத்தில் தற்போது உள்ளார். சாந்த சுந்தரியின் அந்திமக் கிரியைகள் வியாழக்கிழமை மகா பிரஸ்தானத்தில் நடந்தன.

மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளரை, சிறந்த இலக்கியப் பாலத்தை இலக்கிய உலகம் இழந்தது என்று பல எழுத்தாளர்களும் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

செய்தி: ராஜி ரகுநாதன், ஹைதராபாத்-62

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories