பாரதி-100: கண்ணன் என் ஆண்டான்..!

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு பகுதி – 45
கண்ணன் – என் ஆண்டான் – விளக்கம்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

நாயகன் அடிமையாகவும், கண்ணன் ஆண்டானாகவும் கொண்டு இப்பாடல் எழுதப்பட்டுள்ளது. நிலவுடமைச் சமுதாயத்தில் நிலவி வந்த சாதிமுறையினை பாரதியார் இப்பாடலில் பயன்படுத்தியுள்ளார். நாயகன் சொல்கிறான் – இந்த உலகில் எனக்குத் தஞ்சமளிப்பவர் யாருமில்லாமல் தவித்து, தடுமாறி உன்னைச் சரணடைந்தேன் ஆண்டே, நான் உனக்குப் பாரம் என வந்திருக்கிறேன். என்னுடைய துன்பத்தையும், பசிப்பிணியையும் மிடிமையும் தீர்த்துச் சுகம் அளிக்க வேண்டும். உன்மீது அன்புடன் பாடிக் குதித்து மகிழ்வேன்; உன் ஆணை வழி நடப்பேன்.

“நீ என்னை ஆதரித்தால் சேரி முழுதும் பறையடித்து உன்னுடைய அருட் கீர்த்திகள் பாடிடுவேன். பேரிகை கொட்டித் திசைகள் அதிர உன் பெயர் முழக்கிடுவேன். பண்ணையிலே உள்ள பிற அடிமைகள் இவன் பெரிய அதிட்டக்காரன் என என்னைப் பற்றிக் கூறுகின்றனர். நானும் கண்ணா உன் அடிமையாகிய நானும், உன்மீது காதலுற்று இங்கு வந்தேன். வயலில் வேலை செய்து பயிரைக் காத்திடுவேன்; கண்ணா, என் ஆண்டே உன் மாடு கன்றுகளை மேய்த்திடுவேன். என் வேலையைப் பார்த்துவிட்டு எனக்குப் பக்குவம் சொல்லு ஆண்டே” என்று நாயகன் கூறுகிறார்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

“கண்ணா என் ஆண்டவரே உங்களுக்கு சந்தேகம் இருந்தால் எனக்குச் சோதனைகள் வைத்துப் பாருங்கள். தோட்டங்களைக் கொத்திக் காட்டஸ் சொல்; காட்டுகிறேன். இன்று மழை பெய்யும்; வயலில் இந்த வேலையைச் செய்யலாம் என்று நானே கூறுகிறேன். தவறானால் என்னைக் கட்டி வைத்து அடியுங்கள் ஆண்டவரே”.

“கண்ணா என்னுடைய ஆண்டவரே நீ எதற்காக என்னைப் பராமரிக்க வேண்டும் தெரியுமா? என்னுடைய வீட்டில் உள்ள பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப் பிழைத்திட வேண்டும் ஐயனே. என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு நான் சில உதவிகள் செய்ய வேண்டும் ஐயனே. எங்கள் மானத்தைக் காக்க உடைகள் வேண்டும். நான் பிறருக்குத் தர சில வேட்டிகள் வாங்கித் தரவும் வேண்டும் ஆண்டவரே.

என்னுடைய உடலாகிய ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி ஒரு சில பேய்கள் வந்தே துன்பப் படுத்துது. அதாவது புலனடக்கமில்லாமல் நான் துன்பப்படுகிறேன். அதனை ஒரு மந்திரஞ் செய்து தொலைத்திட வேண்டும் ஐயனே. பேயும் பிசாசும் திருடரும் என்னுடைய பெயரினைக் கேட்ட அளவில், வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க கண்ணா என் ஆண்டவரே ஒரு வழி செய்ய வேண்டும் ஐயனே. – என்று ஆண்டையாகிய கண்ணனைப் பார்த்துப் பாடுவதாக பாரதியார் இந்தப் பாடலை இயற்றியிருக்கிறார்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories