செக்யூலரிஸமும் செருப்படியும்!

இந்த நாட்டுல கடவுள் மறுப்புக் கொள்கையும் இருக்கு… அதுக்கு பேர் செக்யுலரிசம்…
அப்டின்னு கினாதானாகானா சொல்லுறாரு… அதுக்கு அவ்ளோ வேகமா எஸ் எஸ்..னு சத்தமா சொல்லுது பொண்ணு…! ஏன்டியம்மா நீ படிச்ச ஊடக தர்மம் என்னான்னு அழகா தெரிஞ்சு போய்ட்சி!

அதாகப்பட்டது….
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கொள்கையும் செக்யுலரிஸம்… அப்டின்னா,
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கொள்கையும் செக்யுலரிஸம்தானே…!
அந்த வகையில் நான் மத சார்பற்றவன் தான்!

ஆகவே என் போன்ற பலரின் எண்ணத்தை முன்வைக்கிறேன்…

கிறிஸ்துதாஸ் காந்தி – தனி மனிதன் அல்ல… கிறிஸ்துவ மதமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ்., அரசு அதிகாரிகள், அரசு இயந்திரத்தின் ஒட்டு மொத்த வடிவத்தின் ஒரு சிந்தனைக் கருத்துரு! இவர் என்ன சொல்கிறாரோ… அதுதான் அவர்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கும்!

பெருவாரியான மக்களின் நம்பிக்கையை கொச்சைப் படுத்துவதும், இழிவு படுத்திப் பேசுவதும் பேச்சுரிமை என்றால், நமக்கும் அந்தப் பேச்சுரிமை உண்டு. ஆகவே, எப்படியெல்லாம் அந்தப் பேச்சுரிமையை நாமும் பயன்படுதலாம் என்று எல்லோரும் இறங்கிவிட்டால், இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ன பாடு படும்!?

ஊடகத்தினர் இப்படிப்பட்ட நபர்களை அழைத்து பேச வைத்து வேடிக்கை பார்ப்பதும், இப்படிப்பட்ட விதண்டாவாத தலைப்புகளை முன்வைத்து வேண்டுமென்றே காழ்ப்புணர்வை விதைப்பதும் மிகத் தவறு. நேரலையில் தெரிந்தோ தெரியாமலோ இத்தகைய பேச்சு வந்தாலும், உடனே பகிரங்க மன்னிப்பு கேட்டு அல்லது பேசியவரை அங்கேயே மன்னிப்பு கேட்க வைத்து பொது அமைதியைக் காப்பதில் ஊடகத்தின் பங்கு மிகப் பெரிது. இந்த இரண்டையுமே தந்தி டிவி., பின்பற்றத் தவறி விட்டது. நண்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும், அறிமுகமான ஒருவராக இதன் பொறுப்பாளர் பாண்டேக்கு இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன்!

ஏற்கெனவே அதிகாரி மட்டத்தில் இருந்த உமாசங்கர் என்ற ஒரு பைத்தியத்தை வைத்து ஆட்டம் போட்ட கிறிஸ்துவ மிஷனரிகளின் கிறிஸ்துதாஸ் காந்தி என்ற சாயம் இப்போது வெளுத்திருக்கிறது.

கிறிஸ்து தாஸ் காந்தி, தான் அளித்த வாக்குமூலத்தின் படி, இந்து சான்றிதழ் வைத்துக் கொண்டு அரசின் சலுகைகளைப் பெற்று, தேசத்தின் அமைதிக்கு விரோதமாக ஊழியம் செய்திருக்கிறார்! இவர் பணியில் இருந்த போது, எத்தகைய விரோதக் காரியங்களைச் செய்திருப்பார் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறது. இவர் போன்றவர்களை, உடன் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள் இப்போதே சமூகத்துக்கு வெளிப்படுத்த வேண்டும்! அதிகார மட்டம் அழுக்கு நிறைந்துள்ளதை கிறிஸ்துதாஸ் காந்தி வெளிப்படுத்தியிருக்கிறார்.

(என் உதாரண புருஷனை) செருப்பால் அடித்தால் அதை எப்படி தவறென்று சொல்வீர்கள்? அது செக்யூலரிஸம் என்று ஓர் அரசு அதிகாரியாக இருந்த ஒருவர் வலியுறுத்தி பகிரங்கமாக மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்வதால்…
இவர் சொல்வதன் பேரில் காவல் துறையோ நீதித்துறையோ இவர் பெயரில் தகுந்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இவர் சொல்வது உண்மை, உரிமை என்றாகும்.
அப்படி என்றால்,
இனி செக்யூலரிஸம் என்ற பெயரில் எதை யெல்லாம் செய்யலாம் என்று ஒரு பட்டியலைப் போட்டேன்…

அதில் முதலாவதாக வந்து நின்றது… தாடிவாலா சிலைகள் !
என் தாய்த் தமிழை, என் தெய்வத் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று வாய் கூசாமல் சொல்லி, தமிழர்களின் தன்மான உணர்வை மழுங்கடிக்கச் செய்த, ஊருக்கு ஊர் சிலையாக உட்கார வைக்கப் பட்டிருக்கும் கன்னட வெறியர் ஈ.வே.ரா. சிலை…கள்! அடுத்து, அவரின் சீடர்கள் என்ற போர்வையில் மக்களிடையே வெறுப்புணர்வை விதைத்த அண்ணாத்துரை சிலைகள்…அடுத்து வாழும் பெரியார், வாழும் அண்ணா என்று திராவிடக் குடியர்களால் சொல்லப்படும் அந்த ஒருவர்….

அதன் பின், ஏற்கெனவே சிலுவை சுமந்து புனிதர்களால் கல்லடி பட்ட ஒருவர்… மீண்டும் செருப்படி படுவதால் அவருக்கு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை! காரணம் இது செக்யுலர் நாடு. செக்யுலர் நாடு கொடுத்த உரிமையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்!

அடுத்து, இன்னும் இருக்கவே இருக்கிறது… உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் கருத்து இடலாம்! காரணம், இது நமக்கான பேச்சுரிமை, எழுத்துரிமை, செக்யூலர் நாடு கொடுத்த உரிமை!

#த்தூ

செக்யுலர் என்ற பெயரில் காட்டுமிராண்டிகள் தர்பார் நடத்தும் இந்த ஒரு காரணத்துக்காகவே, என் நாட்டை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும்! அதன் பின்னர் மைனாரிடி சலுகைகளைப் பெற்றுக் கொள்ளட்டும்! செக்யூலர் நாட்டில் எதுக்கடா மைனாரிட்டி சலுகைகள் முண்டங்களா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories