January 23, 2025, 5:31 AM
23.8 C
Chennai

பாரதி… யாராம்?!

நான் மயிலாப்பூரில் இருந்த நேரம்… 
வீட்டுக்கு வந்த விருந்தினர் குழாமில் ஒரு பெண்மணி… சற்றே வித்தியாசமாகப் பேசியபடி தொணதொணவென்று இருந்தார். திடீரென்று சுவரில் மேலே பார்த்தவர், பாரதியின் இந்தப் படத்தைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். பாரதியின் இந்தப் படத்துக்கு ஒரு சந்தன மாலையை அணிவித்திருந்தேன். மாலையின் நுனியில் இருந்த குண்டலங்கள் மணிகள் காற்றில் அசைந்து கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும்.
திடீரென அவர் கேட்ட கேள்வியால் நான் நிலைகுலைந்து போனேன். முதலில் இது யார் படம் என்றார் அவர்… அதற்கு எம் அம்மை ’இது பாரதியார் படம்’ என்று பதிலளித்தார்.
உடனே அவர், ‘பாரதியார் உங்க சொந்தக்காரரா?” என்று கேட்டார். என் அம்மைக்கு பதில் ஏதும் சொல்லத் தோன்றவில்லை. உதட்டளவில் சிரித்தபடி என்னைப் பார்த்தார். விட்டுத் தள்ளுங்கள் என்று நான் ஜாடை காட்டினேன்… பேச்சு வேறு புறம் திரும்பியது…
இப்போது எனக்குள் ஒரு எண்ணம் எழுகிறது. நேரு மாமாவாம். காந்தி தாத்தாவாம். இது தேசிய அளவில். இங்கும் ஒரு சிலர் தந்தை, அண்ணா என்றெல்லாம் ஒரு சிலரை சொந்தம் கொண்டாடும்போது, பாரதியை மட்டும் நாம் ஏன் சொந்தம் கொண்டாடாது போனோம் என்று!
சின்னஞ்சிறு வயதில் மரித்து விட்ட பாரதியை சமூகம் எந்த சொந்தத்தில் பார்க்க விரும்பும்?!
ALSO READ:  சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (47): வேதஸ ந்யாய:

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

  1. அருமையான பதிவு.
    சில நிகழ்வுகள் வேதனையாக இருக்கின்றன. சினிமா நடிகரை கொண்டாடும் நம்மவர்களுக்கு பாரதியார் பிறந்த நாள் நினைவுக்கு வருவதில்லை.
    நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.