பால்மரக் காட்டினிலே…

rubber trees in achankoil - 2026

நான் பயின்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ் பாடப் பிரிவில் நாவல் ஒன்று கொடுக்கப் பட்டிருந்தது. அது, அகிலன் எழுதிய “பால்மரக் காட்டினிலே” … வகுப்பில் வாசித்துக் காட்டி விளக்கினார் தமிழ்ப் பேராசிரியர் சுபாஷ் சந்திரபோஸ் சார்.

கடனே என்று படித்து வைத்தேன். பின்னாளில் கலைமகள் பத்ரிகை அலுவலகத்தில் பணியில் இருந்த போதுதான், கி.வா.ஜ.,வுக்கும் அகிலனுக்கும் இருந்த தொடர்பு, மலேசியா செல்லும் முன் அகிலனிடம் ஒரு நாவலுடன் வரவும் என கிவாஜ., விடுத்த வேண்டுகோளின் படி, அவர் “பால்மரக் காட்டினிலே” எழுதிய விதம்… இவற்றையெல்லாம் அறிய நேர்ந்தது.

மலேசிய ரப்பர் தோட்டங்களில் கூலித் தொழிலாளராகச் சென்ற தமிழரின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டதுதான் இந்த நாவல்…

அதுபோல்… நெல்லை பத்தமடையில் தோன்றி ஹிமாலயத்தின் ரிஷிகேசத்தில் கரைந்த ஜோதி சுவாமி சிவானந்தர், ஒரு மருத்துவராக மலேசியாவில் இதே ரப்பர் காடுகளில் பெரும் சிரமங்களைச் சந்தித்த தமிழர்களுக்கு எத்தகைய உணர்வுபூர்வமான உதவிகளைச் செய்தார் என்பதைப் படித்த போது, கண்களில் நீர் பெருக்கெடுத்தது..!

கடந்த ஒன்றாம் தேதி, என் ஊர் செங்கோட்டைக்கு வந்திருந்த கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சார், பதிப்பாளர் பி.டி.ராஜன் ஆகியோரை செங்கோட்டையில் இருந்து தென்மலை, குளத்துப்புழா, நெடுமங்காடு வழியாக காரில் திருவனந்தபுரத்துக்கு மலைப்பாதையில் அழைத்துச் சென்றேன். ஆரியங்காவு கடந்து விட்டால், அருமையான சாலை. அதுவரை பொறுமை மிகத் தேவை. அப்போது மலையில் இருபுறமும் இருந்த ரப்பர் மரங்களைப் பார்த்து ரசித்தபடியே மேற்படி “பால்மரக் காட்டினிலே” படித்த அனுபவத்தை கீழாம்பூர் சாரிடம் சொல்லிக் கொண்டே வந்தேன். கலைமகளில் நாவலாக வந்த பின்னணியை அவர் சொன்னார்.

தற்போது, அச்சன்கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு. மதியம் 12 மணி உச்சி தரிசனம் முடிந்து, அருகே இருந்த ஆற்றில் கொஞ்சம் கால் நனைத்து வருவோமே என்று கீழே இறங்கினேன். ஆற்றை ஒட்டி அமைந்திருந்த ரப்பர் மரங்களைக் கண்டதும் இந்த நினைவுகள் தான் ஒட்டிக் கொண்டிருந்தது. ரப்பர் பால் சொட்டுச் சொட்டாக அந்தக் கொட்டாங்குச்சியில் சேர்ந்து கொண்டிருந்தது! இது ரப்பராகி வந்தாலும் அதன் நினைவுகளை அழிப்பது சிரமம் தான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories