spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்கவிதைகள்தேர்தல் கால வெண்பாக்கள்

தேர்தல் கால வெண்பாக்கள்

- Advertisement -
IMG 20210323 WA0015

தேர்தல் கால வெண்பாக்கள்”
(கவிஞர் மீ.விசுவநாதன்)


உயிரே உறவே உலகே எனவே
கயிறே திரிக்கும் கலையே – வயிறே
துடிக்கும் படியே குடியைக் கெடுக்க
நடிக்கத் தெரிந்ததே நாக்கு. (1)

மெய்யிலே ஆசையை மேன்மையாய்க் கொள்ளென்றேன் ;
செய்கிறேன் என்றவர் சொன்னதோ, ” பொய்யெனும்
தேகத்தில் முப்போகம் காண்பதற்கு எப்போதும்
காமத்துப் பாலைக் கல.” (2)

வாக்குக்காய் வாசலில் வந்து கிடப்போரே !
நாக்கில் நரம்பின்றி நாளெலாம் பேசியேன்
சேமம் கெடுக்கின்றீர் ! பேசாமல் ஊழலிலா
நாமத்தைச் சொல்லி நட . (3)

ஓட்டுக்காய் கையில் ஒருகாசு பெற்றாலும்
நாட்டுக்கு நாம்துரோகம் செய்கின்றோம் – வீட்டிற்குச்
சாபத்தைச் சேர்க்காதீர் ! மானமுடன் சொல்லிடுவீர்,
“பாபப் பணமே பதுங்கு “. (4)

மதுவிலக்கு வேண்டுமென மாநாடு போட்டுப்
புதுவழக்குப் பேசுகிறார் பொய்யர் – இதுபோன்ற
போலிகள்தான் நாக்கூச்சம் இல்லாமல் கூறுகிறார் ,
“கூலிக்கு ஜாலி குடி”. (5)

வெற்றிமேல் வெற்றி வெறிபிடித்த வெற்றியென
சுற்றித் திரியாதீர் சொந்தங்காள் ! – கற்றவர்
உள்ளத்தில் கள்ளம் புகுந்ததால் அந்தவோர்க்
கள்வனின் ஓட்டெலாம் காசு . (காசு – குற்றம்) (6)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe