உலகத்து  சமத்துவத்தின்  பெருவிழா

mahakumbamela 2025 crowd foriegn devotees praised - 2026

கவிஞர் கண்ணன் திருமலை அய்யங்கார்

உலகத்து  சமத்துவத்தின்  பெருவிழா – என்றும்
உயர்வான சனாதனத் திருவிழா!
திலகமென்று பாரதத்தின் உறுவிழா – இந்த
தரணிதனில்  புவி வியக்கும்  ஒரு விழா — 01

திரிவேணி சங்கமமே அமிர்தகலம்(ஸ்)- அதை
தெரிந்துரைத்தார் ருஷிதபஸர் சாது;முனி 
திரிகாலம் அறிந்தவரின் வாக்கேவேதம் 
திவ்யஒளி க்ரகக்கோட்டில் அமையுந்நாள்: — 02

பின்சந்ததி  சீர்வாழ்வின் பொருட்டாக- அவர்
படைத்திட்டார் புவிப்பெரிய மாந்தர்விழா!
இன்றுவரை தீர்த்தராஜ் ப்ராயாக்ராஜில் 
இனியபடி தொடர்கிறது; இனியுமுண்டு!!– 03

வர்ணத்து ஜாதியில்லை  பேதமுமில்லை – பொருள்
வைப்பெழுப்பும் வறியர்,வளர் பார்வைகளில்லை
தற்குறிக்கும் தலைமையர்க்கும் தனிவழியில்லை
தாய்மடியில்  குழந்தைகளாய் எல்லோர்மனது. — 04

மண்கடந்து மதங்கடந்து தானாய்வந்தார்- நம் 
மனுதர்ம மேன்மைகண்டு சங்கம்நின்றார் !
கண்கடந்த ஆத்மசுத்தி நாடிசென்றார்
கங்கைமடி யமுனைமடி புனிதமென்றார் !!– 05

கோடிகோடி  பக்தர்மூழ்கு  ப்ரயாக்ராஜில்-ஒரு
கொசுயில்லை குப்பையில்லை கொள்குறையில்லை
நாடிபாடி வந்தவர்க்கு பிணிபசியில்லை- முங்கு
நாளவர்க்கு பெருவீடு முன்மாதிரியாம். –06

மதமாற்றம் செய்யுமொரு நிகழ்வுமில்லை -எந்த
மதத்தோடும் பிணக்கில்லை போட்டியுமில்லை!
விதத்தேயாம் தொன்றுதொட்டு சனாதனரே – அதன்
விதை,தொடா மண்ணில்லை மனதுமில்லை!! — 07 

எச்சில்’துப்பி ‘உணவளித்த செய்திகளில்லை -அண்டும்
எதிர்மதத்தை தூற்றியதாய் தகவல்களில்லை
அச்சம்கொண்டு  “வஞ்சம்”மனம் கொள்ளவுமில்லை – கங்கை  
அன்னை போற்றி என்றுரைக்கா உதடுகளில்லை.  — 08

அரைநூறு கோடிபக்தர் தீர்த்தமிட்டும் – சங்கம் 
அதில்கிருமி கலங்கலில்லை; தெளிவோட்டம்:
நிறைஞான விஞ்ஞானர் ஆய்வுதேடும் – நம்
நிலம்வியக்கும் மெய்ஞ்ஞான ப்ரம்மவேள்வி !!  –09

பல்லினத்து சாதுக்கள் பற்றற்றோர் – குறு
பல்லாண்டு  காடிருந்த புண்யாத்மா
புள்பறக்கும் வானம்போல் சங்கம்வந்தார்
புத்துலகம் ஆக்கிட்டார் பாரதத்தை !  — 10

முனிரிஷிகள் சரண்தொட்ட திரிவேணி – புவி
மாந்தர்மெய் மனமலம்பும்; கதிதுலங்கும் 
இனியெவரும்  சனாதனம் பழிப்பரேல்
இடித்துரைக்கும்:  அவர்வழியில்  பதிலளிக்கும்,   –11      

ஆரியரோ திராவிடரோ அன்னியர்தானோ – நல்
ஆஸ்திகரோ நாஸ்திகரோ நாடிபார்பாரோ
 கூரியதாய் நிதமொளிரும்  யெம்சனாதனம்
காண்பார்க்கு காணும்வித மாயக்கண்ணாடி — 12

ஓய்வெடுக்கும் வாசுகிக்கும் நாவோட்டிக்கும் – வீதி
உயர்வான அன்னமிட்ட ப்ரபுமார்கட்கும்
சாயாமல் நகர்காத்த காவலர்கட்கும் – விழா
சரித்திர அரசுக்கும்  உலகார்நன்றி,– 13

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories