உலகத்து  சமத்துவத்தின்  பெருவிழா

mahakumbamela 2025 crowd foriegn devotees praised - 2026

கவிஞர் கண்ணன் திருமலை அய்யங்கார்

உலகத்து  சமத்துவத்தின்  பெருவிழா – என்றும்
உயர்வான சனாதனத் திருவிழா!
திலகமென்று பாரதத்தின் உறுவிழா – இந்த
தரணிதனில்  புவி வியக்கும்  ஒரு விழா — 01

திரிவேணி சங்கமமே அமிர்தகலம்(ஸ்)- அதை
தெரிந்துரைத்தார் ருஷிதபஸர் சாது;முனி 
திரிகாலம் அறிந்தவரின் வாக்கேவேதம் 
திவ்யஒளி க்ரகக்கோட்டில் அமையுந்நாள்: — 02

பின்சந்ததி  சீர்வாழ்வின் பொருட்டாக- அவர்
படைத்திட்டார் புவிப்பெரிய மாந்தர்விழா!
இன்றுவரை தீர்த்தராஜ் ப்ராயாக்ராஜில் 
இனியபடி தொடர்கிறது; இனியுமுண்டு!!– 03

வர்ணத்து ஜாதியில்லை  பேதமுமில்லை – பொருள்
வைப்பெழுப்பும் வறியர்,வளர் பார்வைகளில்லை
தற்குறிக்கும் தலைமையர்க்கும் தனிவழியில்லை
தாய்மடியில்  குழந்தைகளாய் எல்லோர்மனது. — 04

மண்கடந்து மதங்கடந்து தானாய்வந்தார்- நம் 
மனுதர்ம மேன்மைகண்டு சங்கம்நின்றார் !
கண்கடந்த ஆத்மசுத்தி நாடிசென்றார்
கங்கைமடி யமுனைமடி புனிதமென்றார் !!– 05

கோடிகோடி  பக்தர்மூழ்கு  ப்ரயாக்ராஜில்-ஒரு
கொசுயில்லை குப்பையில்லை கொள்குறையில்லை
நாடிபாடி வந்தவர்க்கு பிணிபசியில்லை- முங்கு
நாளவர்க்கு பெருவீடு முன்மாதிரியாம். –06

மதமாற்றம் செய்யுமொரு நிகழ்வுமில்லை -எந்த
மதத்தோடும் பிணக்கில்லை போட்டியுமில்லை!
விதத்தேயாம் தொன்றுதொட்டு சனாதனரே – அதன்
விதை,தொடா மண்ணில்லை மனதுமில்லை!! — 07 

எச்சில்’துப்பி ‘உணவளித்த செய்திகளில்லை -அண்டும்
எதிர்மதத்தை தூற்றியதாய் தகவல்களில்லை
அச்சம்கொண்டு  “வஞ்சம்”மனம் கொள்ளவுமில்லை – கங்கை  
அன்னை போற்றி என்றுரைக்கா உதடுகளில்லை.  — 08

அரைநூறு கோடிபக்தர் தீர்த்தமிட்டும் – சங்கம் 
அதில்கிருமி கலங்கலில்லை; தெளிவோட்டம்:
நிறைஞான விஞ்ஞானர் ஆய்வுதேடும் – நம்
நிலம்வியக்கும் மெய்ஞ்ஞான ப்ரம்மவேள்வி !!  –09

பல்லினத்து சாதுக்கள் பற்றற்றோர் – குறு
பல்லாண்டு  காடிருந்த புண்யாத்மா
புள்பறக்கும் வானம்போல் சங்கம்வந்தார்
புத்துலகம் ஆக்கிட்டார் பாரதத்தை !  — 10

முனிரிஷிகள் சரண்தொட்ட திரிவேணி – புவி
மாந்தர்மெய் மனமலம்பும்; கதிதுலங்கும் 
இனியெவரும்  சனாதனம் பழிப்பரேல்
இடித்துரைக்கும்:  அவர்வழியில்  பதிலளிக்கும்,   –11      

ஆரியரோ திராவிடரோ அன்னியர்தானோ – நல்
ஆஸ்திகரோ நாஸ்திகரோ நாடிபார்பாரோ
 கூரியதாய் நிதமொளிரும்  யெம்சனாதனம்
காண்பார்க்கு காணும்வித மாயக்கண்ணாடி — 12

ஓய்வெடுக்கும் வாசுகிக்கும் நாவோட்டிக்கும் – வீதி
உயர்வான அன்னமிட்ட ப்ரபுமார்கட்கும்
சாயாமல் நகர்காத்த காவலர்கட்கும் – விழா
சரித்திர அரசுக்கும்  உலகார்நன்றி,– 13

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Entertainment News

Popular Categories