January 25, 2025, 7:49 AM
23.2 C
Chennai

நினைவுச் சுவை நீங்காதிருக்கையில்…!

meals ஆதவன் உச்சி கடந்தான் அமிலம் சுரந்தது வயிற்றில்! அகோரப் பசிதான்… ஆனாலும் நாவுக்கு சுவை தேவை! உப்பும் உரப்பும் அமுதச் சுவையும் என அறுசுவை ஏக்கம் நாவுக்கு! வழக்கமான கேண்டீன் வாசம் வாய்க்கு ருசியாய் இல்லை.. வாவென அழைத்தேன் வந்தான் உடன் இருந்த நண்பனுமே! உணவு விடுதி வாசல் நாசி துளைத்த வாசம்… கறியும் கூட்டும் காரக் குழம்பும்… கவனமாய் பரிமாறப்பட… கவனத்தில் வந்தாய் நீ! உனக்குப் பிடித்த உருளைக் கிழங்கு கறி! ஒவ்வொரு கவளம் உணவும் உந்தன் கவனம் கொண்டே உள் சென்ற மாயம்! நிமிடம் சில கரைந்திருக்கும்! நிமிர்ந்து பார்த்தால்… நண்பன் பாதிக்கூட உண்ணவில்லை! உங்கள் வேகத்துக்கு என்னால் ஈடுகொடுக்க முடியாது…! நண்பன் முனகினான்… உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்! குழம்பு உரப்பு ரசத்தில் உப்பு ரசமாயில்லை கூட்டு வேகவில்லை… கறியோ பிசுபிசுத்துக் கிடக்கிறது! எப்படி உண்டீர்கள் இதை? உங்கள் நாவில் சுவை தெரியாதா? நாவின் நுனி வரை வந்த பதில்.. நாணத்தால் தேங்கிப் போனது! உன் நினைவுச் சுவை நீங்காதிருக்கையில் உணவுச் சுவை உணர்வில் இல்லையே!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!

Topics