December 6, 2025, 5:59 AM
23.8 C
Chennai

கவிஞர்கள் சபையில் பாரதிக்கும், ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி!

kavya kaumudi - 2025
  • செய்தித் தொகுப்பு: ஜெயஸ்ரீ எம்.சாரி.

ஹைதராபாத்தை சேர்ந்த காவிய காமுதி சர்வதேச பன்மொழி கவிஞர்கள் குழாம் மற்றும் இங்க்ட்யூ பப்ளிகேஷன்ஸ் இணைந்து ஜூம் காணொளி வழியாக சமீபத்தில் நான்கு அமர்வுகளில் நடந்த கவிஞர்களின் சபையில் மொத்தமாக 120 கவிஞர்கள் பங்கேற்றனர்.

காவிய குமுதி குழுமத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பன்மொழிக் கவிஞர் டாக்டர். குமுத் பாலா அவர்களின் முன்னிலையில் நான்கு அமர்வுகளில் முறையே பாலசந்திரன் நாயர் ( திருவனந்தபுரம்), டாக்டர் பாரமித்ரா முகர்ஜி முல்லிக் (மும்பை), காயத்ரி லகியானி சாவ்லா ( மும்பை), அருந்ததி முகர்ஜி ( கோல்கட்டா), ஜாகீர் மாலிக் ( காஷ்மீர்), ப்ரொபஸர் தீபா ஜார்ஜ் ( கேரளா), ப்ரீத நம்பியார் ( மைசூர்), மஞ்சுளா அஸ்தானா மஹந்தி (புவனேஷ்வர்), ஷிவ்வாத் ஷஹ்ர்ஹியார் ( பங்களாதேஷ்), அலாபாடி (ஹைதராபாத்), டாக்டர் மரியா ஃபெர்னாண்டா வில்லா மிக்லியரோ (உருகுவே) மற்றும் டாக்டர் ஸ்ரீநிவாஸ வாசுதேவ் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகவும், சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இங்க்ட்யூ பப்ளிகேஷன்ஸ் டாக்டர் மனோஜ் கிஷோர் நாயக் தான் பேசும் போது வெளிவர இருக்கின்ற காவிய காமுதி குழுமத்தின் இ- புத்தகம் பற்றியும், கவிதை தொகுப்பு பற்றியும் விளக்கமளித்தார்.

குழுமத்தின் 120 கவிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் கவிதைகளை வாசித்து உலகில் மனங்களை இணைக்கும் அற்புதமான விஷயம் கவிதைகளுக்கே உரித்தாகும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தனர்.

முன்னதாக கவிஞர்கள் சபை புரட்சிக் கவிஞர் பாரதியாரை நினைவுக் கூறியது. கவிஞர்கள் குன்னூருக்கு அருகில் வீர மரணத்தை எய்திய ராணுவ தளபதி பிபின் ராவத் அவரின் மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரண்டு நிமிடம் மௌனம் அனுசரித்தனர்.

ஹரி சந்தனா, மைதிலி, உதய்ஸ்ரீ, கே. மஞ்சுளா இறை வணக்கப் பாடல்களை முறையே நான்கு அமர்வுகளில் பாடினர்.

ராஜீவ் மூதேடத், குல்னார் ரஹீம் கான், பங்குரி சின்ஹா மற்றும் சுதா குமாரி ஜுஹி ஆகியோர் தாம் கலந்துக் கொண்ட அமர்வில் நன்றியுரை வழங்கினர் . கவிஞர்கள் சபையை டாக்டர் குமுத் பாலா அழகாய் தொகுத்தளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories