அன்பான பிள்ளை

Published:

Ganesh Chaturthi e1536748988320 - 2026

அன்பான பிள்ளை
(மீ.விசுவநாதன்)

அழகழகாப் பிள்ளையாராம் – அவர்
ஆனைமுகப் பிள்ளையாராம்
குழந்தையவர் கையினிலே – சுவை
கொழுக்கட்டை கொண்டவராம்

அருகம்புல் எருக்கணிந்து- நம்
அகங்காரம் போக்கிடுவார்
பருகபல பட்சணங்கள் – தெருப்
பசங்களுக்குத் தந்திடுவார்

சின்னதான கண்களாலே – நாம்
செய்வதெலாம் அறிந்திடுவார்
சொன்னசொல்லைக் காப்பாற்றும் -நம்
சொக்கன்மகன் பிள்ளையாராம்

மூஞ்சூறு வாகனனாய் – நம்
மோகமதை அழிப்பாராம்
பாஞ்சுவந்து ஆபத்தில் – தன்
பக்தர்களைக் காப்பாராம்

வலப்புறத்து தந்தத்தால் – கதை
பாரதத்தைப் படைத்தாராம்
பலப்பலவாய்ப் பிரியாமல் – நம்
பாரதத்தை ஆள்பவராம்

ஆசாரம் ஏதுமின்றி – ஒரு
அருகம்புல் போட்டாலே
பாசமுடன் ஓடிவந்து – நம்
பாபமெலாம் எரிப்பவராம்

ஓம்ஓம்ஓம் ஒலிகேட்டு – மன
ஒளிதந்தே அருள்பவராம்
ஆம்ஆம்ஆம் நாமெல்லாம் – அவர்
அன்பான பிள்ளைகளாம்.

(இன்று 13.09.2018 ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி)

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img