சென்னையில் நடைபெற்று வரும் நடிகர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கன்னட நடிகர்களின் பேச்சுக்க கண்டனம் தெரிவிப்பதாகவும் நடிகர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக நிகழ்ந்த காரசார விவாதத்தில், நடிகர் சங்க கூட்டம் கடந்த 3 மணிநேரமாக நடந்தம் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
காவிரி பிரச்சனையில் போராட்ட்தில் ஈடுபட வேண்டும் என்று ஒருதரப்பு வலியுறுத்தி வருகிறது. கர்நாடகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என மற்றொரு தரப்பு கருத்து தெரிவித்து வருகிறது.
உறுப்பினர்களின் மாறுபட்ட கருத்தால் 3 மணி நேரமாகியும் முடிவு எடுக்க முடியாமல் திணறி வந்த நிலையில், தீர்மானம் நிரைறவேற்றப்பட்டது.



