20 ஆண்டு பிரிந்த மகன்! பெற்றோருடன் சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

saravanan - 2026

சென்னை: 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகனுடன் அவரது பெற்றோர் ஒன்று சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு மோகன வடிவேலன் சரவணன் என்ற மகன் உள்ளார். நாகேஸ்வர ராவ் பெயின்டர் வேலை செய்து வந்தார். அவரது மகனை 1999ம் ஆண்டு புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டார்.

கடத்தப்பட்ட சிறுவனை எம்எஸ்எஸ் எனப்படும் மலேஷியன் சோஷியல் சர்வீஸ் எனும் அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அங்கே சிறுவனது ஆங்கில திறமையை பார்த்து வியந்த அமெரிக்க தம்பதிகள் தத்தெடுத்துச் சென்று வளர்த்துள்ளனராம்..

தற்போது, நாகேஸ்வர ராவின் மகனுக்கு 22 வயதாகிறது. அமெரிக்காவில் உள்ள தங்கள் மகனை.மீட்டு தங்களுடன் சேர்த்து வைக்கும்படி, நாகேஸ்வர ராவ் தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதுபற்றிய நீதி விசாரணை நடந்ததன் விளைவாக, அமெரிக்காவில் உள்ள மோகன வடிவேலுவை, எம்எஸ்எஸ் அமைப்பு பெரும் முயற்சி எடுத்து, சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இதையடுத்து, நாகேஸ்வர ராவ், சிவகாமி தம்பதியினர் தங்களது மகனை 20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சந்தித்துப் பேசினர். இச்சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்வதாக உள்ளது என்று, இவ்விவகாரத்தில் நாகேஸ்வர ராவ் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories