ஜெயலலிதாவுக்கு இளையராஜா இசையஞ்சலி!

Published:

சென்னை:

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பாடலாசிரியர் அஸ்மின் இயற்றி, வர்சன் இசை அமைத்து, இளையராஜா உருக்கமாக இசை அஞ்சலி செலுத்தி உள்ளனர். இந்த பாடல் இணையதளம் மற்றும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் கேட்டு வருகின்றனர்.
மறைந்த ஜெயலலிதா உடலுக்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழ் திரை உலகத்தினர் இளையராஜா, ரஜினி உள்ளிட்டவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இளையராஜா பாடி ஒரு இசை சமர்ப்பணம் செய்துள்ளார்.

இந்த பாடலில் அம்மா இல்லாமல் நாடே கலங்குதம்மா என்று உணர்த்தப்பட்டுள்ளது,
” வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா,

தாயே எழும்பிடம்மா, தமிழக நாடே அழுகுதம்மா .,”
என்று துவங்கும் இந்த பாடலில் அம்மா , அம்மா என்று ஒவ்வொரு வரிக்கும் முடிகிற படி அமைக்கப்பட்டுள்ளது. ” நெஞ்சுக்குள் நிம்மதி போனதம்மா ” என்று உச்ச ஸ்தாயியில் பாடும் போது முழு சோகத்தை உணர முடிகிறது.

அனுபல்லவி:

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

யாவும் இந்த மண்ணில் நிரந்தரமா, இருந்திடும்மா
நெஞ்சம் பதறுது, கதறுதம்மா., பிள்ளைகளை பாரம்மா
உன் சேவைகள் மறைந்திடுமா., உன்னை போலே யாரம்மா?
தாலாட்டு பாடாமல் தாயானாய் அம்மா
தாய் உன்னை காணாமல் நோயானோம் அம்மா
தாய் இல்லா பிள்ளைக்கும் நீதானே அம்மா
தவிக்கின்றோம் நீ மீண்டும் வர வேண்டும் அம்மா
பாரெங்கும் உன் புகழ் வீசுதேம்மா
பார் உந்தன் பிள்ளைகள் துடிப்பதை அம்மா
ஆறுகள் கண்களில் வழியுதே அம்மா
அநாதையாய் ஆனது நாங்கள் தான் அம்மா
ஆறுதல் இன்றியே போனதே அம்மா, அம்மா., – (வானே இடிந்.,)

[embedyt]https://www.youtube.com/watch?v=u1OPkMwMOwk[/embedyt]

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img