குமரி ஆர்எஸ்எஸ்., முகாமை வீடியோ எடுத்த இருவர்! என்ஐஏ., விசாரணை!

nia - 2026

கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமை ரகசியமாக படம் பிடித்த இரண்டு பேர் செல்போனில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை தொடங்கியுள்ளது

கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் கடந்த 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது இந்த முகாம் இன்றுடன் நிறைவடைகிறது.

முகாமில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் பாபநாச தீர்த்தம் மற்றும் அரசு மருத்துவமனையில் உழவாரப் பணிகளில் ஈடுபட்டனர்

அப்போது சிலர் அவர்களை ரகசியமாக கண்காணித்தனர். அதேபோல் நேற்று முகாம் நடந்து கொண்டிருந்தபோது முட்புதரில் பதுங்கி இருந்து இரண்டு பேர் அவர்களை கண்காணித்தனர் …

இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர்இருவரையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் செல்போனில் பகவதி அம்மன் கோவில் குகநாதீஸ்வரர் கோயில் கூடங்குளம் மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உழவாரப்பணி உள்ளிட்டவற்றை வீடியோ எடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது

ALSO READ:  அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

இதையடுத்து அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்

அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர் அவர்களது செல்போனில் யார் யாரிடம் தொடர்பு கொண்டுள்ளனர் என்று ஆய்வு செய்யப்பட்டது

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் கன்னியாகுமரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது … அதில் எங்களது முகாம் நடந்த இடத்தில் மர்மநபர்கள் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்துள்ளனர் எதற்காக எடுத்தனர் என்று தெரியவில்லை எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக பிடிபட்டுள்ள இரண்டு இளைஞர்களையும் தங்கள் கஸ்டடியில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்

அதில் ஒரு நபரின் செல்போன் எண்ணில் இருந்து சர்வதேச பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது…

ALSO READ:  ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories