நாங்குநேரி பிரசாரத்துக்கு கனிமொழி வந்தார்..!வருவாரா… நட்சத்திரப் பேச்சாளர் ‘திஹார்’ சிதம்பரம்?!

congress office nanguner - 2026

நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரன் ஆதரித்து களக்காடு பகுதிகளில் கனிமொழி எம்பி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்! முன்னதாக அவர் மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து களக்காட்டில் திமுக கூட்டணி தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

இதனிடையே, தற்போது திஹார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயரும், இடைத்தேர்தல் நடைபெற உள்ள இரண்டு சட்டசபை தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இரு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகின்றன.

இந்தத் தொகுதிகளில் பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளன.

congress speakers list - 2026

முன்னதாக, இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 40 பேர் கொண்ட பேச்சாளர் பட்டியலும், அங்கீகாரமில்லாத கட்சிகள் சார்பில் 20 பேர் கொண்ட பட்டியலும் அளிக்கப்பட்டுள்ளன.

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அமைச்சர்கள் எம்பிக்கள் முன்னாள் அமைச்சர்கள் என பலர் இடம்பெற்றுள்ளனர்.

திமுக பட்டியலில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பொருளாளர் துரைமுருகன் கனிமொழி உதயநிதி எம்பி எம்எல்ஏக்கள் என சிலர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக காங்கிரஸ் வழங்கியுள்ள பட்டியலில் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி, மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், செயல் தலைவர் முன்னாள் தலைவர்கள் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது! எனவே, அவர் நாங்குனேரி பிரசாரத்துக்கு வருவாரா என்ற கேள்வி எழுப்பப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories