அதிமுக., பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுவேன்: சசிகலா புஷ்பா

‘அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுவேன்; குறுக்கு வழியில், சசிகலா பொதுச்செயலராக விடமாட்டேன்’ என, சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

தேர்தல் அறிவிக்காமல், குறுக்கு வழியில், பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச்செயலராக சசிகலா திட்டமிட்டுள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களை, பஸ்சில் அழைத்து வந்து, கையெழுத்து வாங்க திட்டமிட்டுள்ளனர். நான், அ.தி.மு.க., – எம்.பி.,யாக உள்ளேன்; கட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ளேன். நான் கட்சியில் இருந்து, நீக்கப்பட்டதற்கான கடிதம் எதுவும் எனக்கு வரவில்லை. என் கணவர் லிங்கேஸ்வரனும், கட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ளார். அவர், மும்பையை சேர்ந்த, பொதுக்குழு உறுப்பினர் மணி மற்றும் சிலருடன், கட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றார்.

ஜனநாயக முறைப்படி, போட்டியிட மனு கொடுக்க சென்றவரை, சசிகலாவின் ஆதரவாளர்கள் தாக்கி உள்ளனர். கட்சி அடிப்படை உறுப்பினரில், யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஒன்றரை கோடி தொண்டர்கள் சேர்ந்து, பொதுச்செயலரை தேர்வு செய்ய வேண்டும்.ஆனால், சசிகலா, குறுக்கு வழியில் பொதுச்செயலராக விரும்புகிறார். அவருக்கு ஆதரவு உள்ளது என்றால், முறைப்படி தேர்தலை நடத்தலாம். அவரை, தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும், பொதுச்செயலரை தேர்வு செய்ய முடியாது. போட்டியிட விரும்புவோருக்கு, வாய்ப்பு அளிக்க வேண்டும். நான், பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடுவேன்; சசிகலா, பொதுச்செயலராக விட மாட்டேன்; சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories