முரசொலி அலுவலக பஞ்சமி நில விவகாரம்: விசாரணை கோரி எஸ்சி ஆணையத்திடம் பாஜக., மனு!

Published:

bjp srinivasan complaint to sc commission - 2026

முரசொலி அலுவலகம், அதிரடியாக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ள நிலையில், இது குறித்து விசாரணை கோரி, பாஜக., சார்பில் மனு அளிக்கப் பட்டுள்ளது.

பாஜக., மாநில செயலாளர் மதுரை பேராசிரியர் இரா. ஸ்ரீனிவாசன், எஸ்சி ஆணைய துணைத் தலைவர் டாக்டர் எல்.முருகனிடம் இதற்கான கோரிக்கை மனுவை அளித்துள்ளதாக தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். முரசொலி தினப் பத்திரிகை அலுவலகம் முறைகேடாக பஞ்சமி நிலத்தை அபகரித்து கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோருவதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது…

முரசொலி அலுவலகம் #பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டை, தீர விசாரிக்கும் படி தேசிய SC கமிஷன் துணைத் தலைவர் டாக்டர் L முருகன் அவர்களிடம் புகார் அளித்தேன். விசாரிப்பதாக மாண்புமிகு முருகன் அவர்கள் உறுதி அளித்தார். – என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

பாஜக.,வின் தேசிய செயலர் ஹெச்.ராஜா தமது டிவிட்டர் பதிவில்,

பட்டாவாங்கியிருப்பது 1985 என்றால் முரசொலி ஆரம்பிக்கப்பட்டது 1956 ல். ஸ்டாலின் ஏன் இன்னும் மூலபத்திரத்தை வெளியிட வில்லை? பஞ்சமி நிலத்தை அபகரிக்கின்ற பாதகர்களின் கட்சி திமுக என்ற கேள்வி எழுகிறது. ஆகவே மூலபத்திரத்தை வெளியிட வேண்டும். அதுக்கு ஏன் இவளோ தயக்கம்??? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆக… பாஜக.,வும் பஞ்சமி நில விவகாரத்தில் திமுக.,வுக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கியுள்ளது தெரிகிறது.

ஒரு படத்தைப் பார்த்துவிட்டு வந்து ஏதோ கருத்து சொல்வதாக நினைத்து ஸ்டாலின் இப்போது இடியாப்பச்சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்!

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img