சென்னை: போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது. ஏற்கெனவே குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி மையத்தில் 3 கட்டப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில், போக்குவரத்து கழகங்களில் உள்ள 42 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட 14 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்று வருகின்றது. தமிழக நிதித்துறை கூடுதல் செயலாளர் உமாநாத், போக்குவரத்து கழக செயலாளர் பிரபாகர்ராவ் மற்றும் போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை இயக்குனர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர். 3 கட்ட பேச்சுவார்த்தையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தொழிற் சங்க பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று 4 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

