மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம்: இதுவரை உயிரிழந்தவர்கள்..!

manja - 2026

சென்னை ஆர்.கே.நகரில் பட்டம் விட மாஞ்சா நூல் பயன்படுத்தியதாக கொருக்குப்பேட்டையை சேர்ந்த இருவர் கைது.

சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை பலியான சம்பவத்தை அடுத்து, போலீஸார் தீவிரமாக மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விடுபவர்கள் குறித்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட்ட கொருக்குப்பேட்டையை சேர்ந்த நாகராஜ் என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார். மேலும், 15 வயது சிறுவனையும் கைது செய்தது காவல்துறை!

நொறுக்கப்பட்ட கண்ணாடி துண்டுகள் உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்படும் மாஞ்சா தடவிய நூல் அறுத்து, சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

கடந்த காலங்களில், மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த சம்பவங்கள் எத்தனை?

2006 – சென்னை வண்ணாரப்பேட்டையில் கோதண்டராமன் என்பவர் உயிரிழப்பு!

2007 – வடசென்னையில் 2 வயது சிறுவன் உயிரிழப்பு!

2011 – சென்னை எழும்பூரில் ஷெரீனா பானு என்ற 4 வயது சிறுமி உயிரிழப்பு!

2012 – அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மதுரவாயலில் உயிரிழப்பு!

2012 – தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் உயிரிழப்பு!

2013 – சென்னை சென்ட்ரல் எதிரில் உள்ள பாலத்தில் மந்‌தவெளியைச் சேர்ந்த ஜெயகாந்த் உயிரிழப்பு!

2015 – பெரம்பூர் பாலத்தில் பெற்றோருடன் சென்ற 5 வயது சிறுவன் ‌அஜய் உயிரிழப்பு!

2017 – கொளத்தூரை சேர்ந்த சிவபிரகாசம், தாம்பரம்-மதுரவாயல் பைபாஸில் உயிரிழப்பு!

2019 -‌ தாம்பரத்தில் 2 சிறுவர்கள் படுகாயம்; அறுவை சிகிச்சை செய்ததால் பிழைத்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories