வள்ளுவர் ‘சர்ச்சை’ வேண்டாம்; வள்ளுவம் சர்ச்சை போதுமே!

thiruvalluvar deivapulavar - 2026

“புகையை நம்பி உணவை வெறுக்கும் மனிதர்களை இந்த ஒரு விஷயத்தில்தானா பார்க்கிறோம்?
– பாரதியார் (சுதேசமித்ரன் 25.11.1915)

திருவள்ளுவர் பற்றிய சர்ச்சைகளைப் படிக்கும் போது இந்த வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன.

திருக்குறளில் பேசப்பட்டிருக்கும் செய்திகள் அது எழுதப்பட்ட காலத்தில் (கி.பி. 500-550 என்கிறார் கமில் ஸ்வெலபில்) வேறு எந்த நூலிலும் எழுதப்பட்டதில்லை. எந்த மொழிக்கும், எந்த மதத்திற்கும், எந்த ஜாதிக்கும், எந்தக் காலத்திற்கும், எந்தத் தொழிலுக்கும் ஏற்புடைய செய்திகள் அவை. அதில் ஏதேனும் பத்துக் குறளையேனும் பின்பற்றியிருந்தால் தமிழ்ச் சமூகம் உருப்பட்டிருக்கும். ஆனால் அதை உருப்போடுவதோடு நாம் நின்று விட்டோம்

ஆனால் வள்ளுவரையும் குறளையும் பற்றிய சர்ச்சைகளைக் காலம் காலமாய் வளர்த்து வருகிறோம்

அவர் இந்துவா? சமணரா?
அவர் என்னஜாதி? பூணூல் போட்டிருந்தாரா இல்லையா?
திருக்குறளை எழுதியவர் ஒருவரா? பலரா?
அவருக்கு தாடி இருந்ததா? தலையில் சடையா? மொட்டையா?
வள்ளுவர் வடக்கே இருந்து வந்தவரா?
திருக்குறள் மனுஸ்மிருதியைத் தழுவி எழுதப்பட்டதா?
திருக்குறள் பகவத் கீதையைச் சார்ந்து எழுதப்பட்டதா?

இந்தச் சர்ச்சைகளால் தமிழருக்கு ஏதேனும் பயன் உண்டா?

திருக்குறளை எழுதியது யார் என்ற கேள்விக்கு ஒரு பதில்தான் உண்டு.
திருக்குறளை எழுதியது ஒரு தமிழன்!

தன்னை ஒரு சிமிழுக்குள் சிறை வைத்துக் கொள்ள மறுத்த ஒரு தமிழன்
வாழ்வின் அடிப்படை அறம் என்று நம்பிய ஒரு தமிழன்
அவ்வளவுதான். முற்றும். Dot. Period. The end.

அபத்த சர்ச்சைகளை நிறுத்துங்கள் ஆயாசமாக இருக்கிறது
ஆனால் இவர்கள் ஓயமாட்டார்கள்!

ஒட்டகத்திற்கு ஒரு இடத்திலா கோணல்? தமிழ் நாட்டிற்கு ஒரு வழியிலா துன்பம்?
(இதுவும் பாரதி சொன்னதுதான்)

  • மாலன் நாராயணன் (மூத்த பத்திரிகையாளர்)

1 COMMENT

  1. இப்போது உள்ள திருவள்ளுவர் படம் ஓர் பிராமண சர்மா வினால் எழுதப்பட்டது . அவர் தான் முதல் படம் வரைந்தது
    வள்ளுவர் ஒரு ஹிந்து முனிவர் .
    மற்றையெல்லாம் கதை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories