spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நவ.11ல் பொறுப்பேற்பு!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நவ.11ல் பொறுப்பேற்பு!

- Advertisement -

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ள ஏ.பி.சாஹி வரும் நவ.11ம் தேதி பதவியேற்கிறார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த தஹில் ரமானி, மேகாலயா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் இந்த இடமாற்றத்தை மறுத்த தஹில் ரமானி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா, குடியரசுத் தலைவரால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. இதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம் செய்யப் பட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பீகார் தலைநகர் பாட்னாவின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இருந்து வருகிறார்.

அம்ரேஷ்வர் பிரதாய் சாஹி எனப்படும் ஏ.பி.சாஹி, வரும் நவ.13ம் தேதிக்குள் பதவி ஏற்றுக் கொள்ளும்படி அவருக்கு தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், அவர் வரும் நவ.11ம் தேதி பதவி ஏற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

கிண்டி ராஜ்பவனில் நடக்கும் நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe