3 நாளில் அவசரச் சட்டம் இயற்ற முடிந்தது எப்படி?: முதல்வர் விளக்கம்

Published:

சென்னை:

3 நாட்களில் அவசரச் சட்டம் இயற்ற முடிந்தது எப்படி என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

3 ஆண்டுகளாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தான் 3நாளில் ஜல்லிக்கட்டு அவசரசட்டம் இயற்ற முடிந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஜல்லிகட்டிற்கு அனுமதி வழங்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க விழாக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறினார்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படம் வைத்திருந்த நபர் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதில் அளித்தார்.

Related articles

Recent articles

spot_img