“போலீஸார் பொய் வழக்கு!” சிதம்பரம் தீட்சிதர் மனுவுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

chidambaram bakthai - 2026

சிதம்பரம் போலீஸார் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்திருப்பதாக, தீட்சிதர் தர்ஷன் மனுவில் கூறிய கருத்துக்கு பதில் அளிக்குமாறு போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில், முன்ஜாமீன் கோரி தீட்சிதர் தர்ஷன் 2-வது முறையாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கோவில் நடை அடைக்கும் நேரத்தில் வந்து பூஜை செய்ய வேண்டுமென தகராறு செய்ததாகவும், தன்னை நோக்கி கையை தூக்கியதால், தற்காப்புக்காக தள்ளி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கெதிராக போலீசார் பொய் வழக்கு பதியப் பட்டிருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளர். எனவே, இது தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் தர்ஷன், அர்ச்சனை செய்து வழிபட வந்த பெண்மணியை தாக்கியதாக தகவல் வெளியானது. இது குறித்து சிதம்பரம் தீட்சிதர் வட்டாரங்களில் குறிப்பிடப் படுவதாவது…

அந்தப் பெண்மணி, அர்ச்சனைக்கு தட்டைக் கொண்டு வந்து கொடுத்தாராம். இவர் அருகே நின்றிருந்த அசிஸ்டெண்ட் தீட்சிதர் சிறுவனைப் பார்த்து, தேங்காய ஒடச்சிட்டுகொண்டு வா என்று கூறியிருக்கிறார். அந்தப் பையன் எள் என்றால் எண்ணெய் ரகம் போலுள்ளது… தேங்காயை உடைத்து, ஸ்வாமிக்கு நைவேத்தியமே செய்துவிட்டு, அதில் அர்ச்சனைப் பூக்களையும் போட்டு கொண்டு வந்துவிட்டானாம்…

இந்த அம்மா கேட்டிருக்கிறார்… ஏஞ்சாமி பையன் பிறந்த நாள், அர்ச்சனை செய்து, நைவேத்யம் செய்து பிரசாதம் கொடுப்பீங்கன்னுதானே பாத்தேன்… இப்படி செய்யிறீங்களே.. பையன் பேரு நட்சத்திரம் கூட கேக்கலியே என்று கூறியிருக்கிறார்…

அதற்கு தர்ஷன், அதனாலென்னா… நீங்களே உங்க பையன் பேரு நட்சத்திரத்தை எல்லாம் மனசில நெனச்சிக்க வேண்டியதானே… என்று சொல்லியிருக்கிறார்…

நாங்களே மனசில நினைச்சிக்க… நீங்க என்ன மயித்துக்கு இங்க ஒக்காந்திருக்கீங்க… என்று அவர் கேட்டிருக்கிறார்…?!

அதன்பின்னர்… வாக்குவாதம் முற்றியதாகக் கூறப் படுகிறது! அப்போது, ஒருவரை ஒருவர் தாக்க முனைந்த போது, அந்தப் பெண்மணியை இவர் தடுத்ததாகவும், அந்தப் பெண்மணி நிலை தடுமாறி கீழே சரிந்ததாகவும், ஆனால் தாம் கீழே விழுந்ததாகவும், காயம் பட்டதாகவும் போலீசில் புகார் கொடுத்டிருக்கிறார் என்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் கோயிலில் சிசிடிவி பதிவு கிடைக்கவில்லை என்கிறார்கள். காட்சிப் பதிவு வசதி அங்கே இல்லையாம்.

இதை அடுத்து, தீட்சிதர்கள் ஒன்று கூடி, ரூ. 5 ஆயிரம் அபராதம், 2 மாதம் கோயில் பணியில் இருந்து சஸ்பெண்ட் என முடிவு செய்திருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories