நான் பணம் வாங்கியது உண்மைதான்: டாக்டர் பாலாஜி!

Published:

ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போது நடந்த இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி அதற்கான விண்ணப்பத்தில் கைநாட்டு வைத்தார். அதை உறுதி செய்தவர் அரசு மருத்துவர் டாக்டர் பாலாஜி.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் பாலாஜி ₹5 இலட்சம் பெற்றதாக கூறப்பட்டிருந்தது. இது பொய் சாட்சி சொன்னதற்காக கொடுக்கபட்டது என பரபரப்பு கிளம்பியது.

இதை மறுத்த டாக்டர் பாலாஜி “அந்த பணம் வாங்கியது உண்மை தான் ஆனால் அது இலண்டன் மருத்துவர் தங்கும் செலவிற்காக தரப்பட்டது” என கூறியுள்ளார்.

வெளிவந்த ஆவணங்கள் அனைத்தும் போலி என தினகரன் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி வந்த நிலையில் டாக்டரின் இந்த கருத்தால் சசிகலா தரப்பிற்கு நெருக்கடி கூடியுள்ளது.

 

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img