தப்ளிக் ஜமாத் தொடர்பு: பரிசோதனைக்குச் சென்ற அரசு மருத்துவக் குழுவினரை அடித்து விரட்டிய ‘மர்ம’ மனிதர்கள்!

kovilpatti attack - 2026

தில்லியில் கடந்த மார்ச் மாத மத்தியில் நடைபெற்ற தப்ளிக் இ ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற நபர்கள் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் அவ்வாறு கலந்து கொண்ட மர்ம மனிதர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அவரின் மர்மமான கிராமத்திற்கு மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்ற அரசு மருத்துவக் குழு, மர்ம நபர்களால் அடித்து விரட்டப்பட்டனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு அய்யனார்ஊத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தில்லியில் நடைபெற்ற தப்ளிக் இ ஜமாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ஊருக்குத் திரும்பியிருந்தார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், அவர் வசித்து வந்த அய்யனார்வூத்து கிராமம் தனிமைப்படுத்தபட்ட பகுதியாக அறிவிக்கப் பட்டது. தொடர்ந்து, அந்த கிராமத்தை போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தது மாவட்ட நிர்வாகம்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

இந்நிலையில் மேற்படி மர்ம நபரின் குடும்பத்தினருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்காக சனிக்கிழமை நேற்று மாலை மருத்துவக் குழுவினர், தாசில்தார் பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோருடன் சென்றனர்.

பரிசோதனை முடிந்து குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு மருத்துவக் குழுவினர் புறப்படத் தயாரானபோது, மருத்துவ குழுவினரை செல்ல விடாமல் வண்டியைத் தடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த ‘மர்ம’ இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மருத்துவ குழுவினர் மீது அந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது.

இந்த மர்மமான தாக்குதலில் சுகாதார ஆய்வாளர் காளிராஜின் சட்டை கிழிந்தது. செல்போனை பறித்துக் கொண்டு அவரது பைக்கையும் கண்மூடித்தனமாக அடித்து, மர்ம கும்பல் சேதப்படுத்தியது.

இந்த நாட்டின் சட்டத்துக்கு தாங்கள் கட்டுப் படத் தேவையில்லை என்று ‘மர்ம’மான மதத்தின் அடிப்படைவாதிகளால் மத போதனை செய்யப்பட்ட அந்த மர்ம இளைஞர்களின் அடாவடித் தாக்குதலால், இந்திய நாட்டின் சட்டத்தை செயல்படுத்த வந்த தங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை உணர்ந்து, தாசில்தார் பாஸ்கரனும், இன்ஸ்பெக்டர் முத்துவும் பெரிதும் ஆடிப் போனார்கள்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

செய்வதறியாது திகைத்த அவர்களின் நிலைமையைக் கண்டு மனம் இரங்கிய அந்த மர்ம இளைஞர்களின் கிராமத்தைச் சேர்ந்த சில முஸ்லிம் பெரியவர்கள், அரசு அதிகாரிகளுக்குக் கைக்கொடுக்க வந்தனர். இதை அடுத்து அவர்களின் ஒத்துழைப்புடன் அந்தக் குடும்ப உறுப்பினர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, மருத்துவக் குழு தாக்கப்பட்ட சம்பவம் மருத்துவத் துறையினருக்கு தெரிந்தது. அவர்கள், கயத்தாறு அரசு மருத்துவமனையில் கூடி தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்று கூறி ஆவேசம் அடைந்தனர். பின்னர் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், கிராம செவிலியர்கள் ஆகியோர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்ட்ம் என்று கோரியும் கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை ஏற்று அவர்கள் தங்கள் பணிக்குச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் மர்ம நபர்கள் அல்லாத வெகுஜன மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு உதவி செய்யவும், மற்றவர்களுக்கு வைரஸ் நோய்க் கிருமிகள் பரவாமல் தடுப்பதற்குமே அரசும் மருத்துவப் பணியாளர்களும் செயல்படுகிறார்கள் என்ற அறிவு கூட இல்லாமல் மர்ம நபர்கள் தாக்குதலில் ஈடுபடுவதை அரசும் காவல்துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது, பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories