January 26, 2025, 8:34 AM
22.3 C
Chennai

ஊரடங்குதான்… ஆனாலும் மறியல்! காவேரிப்பட்டணத்தில்… ஏன் தெரியுமா?!

kaveripattinam people protest
மக்கள் சாலையில் தடுப்பு அமைத்து குப்பை கொட்டக் கூடாது என்று மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இன்று காலை பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். காவேரிப்பட்டணம் தேர்வுநிலை பேரூராட்சி குப்பை கிடங்கில் குப்பையைக் கொட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துதான் இந்த மறியல்!

காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்டு 15 வார்டுகள் உள்ளன. இந்த 15 வார்டுகளிலும் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரிக்க பஞ்சாயத்தில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை சேகரிக்கும் இடம் அமைந்துள்ளது. இந்தக் கிடங்கு மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது.

காரணம், காவேரிப்பட்டணத்தில் உள்ள அனைத்து வார்டுகளின் குப்பைகளையும் சப்பானிபட்டி அருகில் சொந்த நிலம் வாங்கி அந்த இடத்தில் குப்பைகளைக் கொட்ட வேண்டும் என்று அரசு அனுமதித்துள்ளது. அப்படி இருக்கும் நிலையில் தற்போது தேர்வு நிலை பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், மூடப்பட்டிருந்த கிடங்கை திறந்து குப்பைகளை கொட்டியுள்ளனர்.

kaveripattinam people protest1
மக்கள் சாலையில் தடுப்பு அமைத்து குப்பை கொட்டக் கூடாது என்று மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கு, அப்பகுதியில் வாழும் மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து அங்கு குப்பைகளை கொட்டக் கூடாது என்று கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏனென்றால் குப்பைக் கழிவுகள் கோழி கழிவுகள் இறந்த நாய் மற்றும் மருத்துவக் கழிவுகள் என அதிகளவில் குப்பைகளைக் கொட்டுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே அப்பகுதி மக்கள் சாலையில் தடுப்பு அமைத்து குப்பை கொட்டக் கூடாது என்று மறியலில் ஈடுபட்டனர்.

ALSO READ:  தமிழகத்தை மிரட்ட வரும் அடுத்த புயல்? எச்சரிக்கும் வானிலை நிலவரம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் படாத மாவட்டமாக கிருஷ்ணகிரி திகழ்கிறது. முன்னதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியைச் சேர்ந்த 43 வயது நபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சுயபரிசோதனை செய்து கொண்டார். அவருக்கு முதற்கட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக தகவல் பரவியது. அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கூறும்போது, ஓசூர் ஊழியர் மற்றும் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் லாரி டிரைவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி தொடர்ந்து நீடிக்கிறது என்றார்.

ALSO READ:  துணை முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் உதயநிதி ஸ்டாலின்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IND Vs ENG T20: 2வது போட்டியிலும் இந்திய அணி த்ரில் வெற்றி

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி-20 ஆட்டம்- சென்னை-25 ஜனவரி 2025இரண்டாவதிலும் வெற்றிமுனைவர்...

Padma Awards 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri.

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று