January 20, 2025, 6:26 PM
26.2 C
Chennai

கொரோனா: மருத்துவரின் உடல் அடக்கத்திற்கு தடை செய்த 14 பேரும் குண்டர் சட்டத்தில் கைது!

kaithu
kaithu

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த டாக்டரின் உடல் அடக்கத்தை தடுத்த 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குனராக இருந்த டாக்டர், கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்தார்.

அதில், அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய டி.பி.சத்திரம் பகுதியில் அடக்கம் செய்ய கொண்டு சென்ற போது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் வேலங்காடு மயான பூமிக்கு கொண்டு சென்றனர். அப்பகுதியை சுற்றி இருப்பவர்களும் போராட்டம் நடத்தி கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஆம்புலன்ஸ் சேதமடைந்தது. இதில் சுகாதார ஊழியர்கள் காயமடைந்தனர்.

பின்னர், கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, டாக்டர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 74 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பலரை கைது செய்துள்ளனர். அவர்கள் ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் கைதான பெண் உட்பட 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ALSO READ:  அரசியல் சட்ட மேதை - பி.என். ராவ்... புகழ்பெறாத மாமனிதர்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...