கடலூரில் கர்நாடக அரசு பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் கைது

Published:

கடலூர்: கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளதைக் கண்டித்தும், தடுப்பணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி காவிரி பாசன மாவட்டங்களில் கர்நாடக அரசின் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டத்தை விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி சனிக்கிழமை இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நகல் எரிப்புப் போராட்டத்தை நடத்த முயன்றனர். போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. எனவே, அங்கே குவிந்த விவசாயிகள் 36 பேரை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Related articles

Recent articles

spot_img