தள்ளு வண்டியே வீடு! இறந்து போன கணவன்.. செய்வதறியாத மனைவி இறந்த உடலோடு அமர்ந்திருந்த பரிதாபம்!

Published:

mylapur - 2026

மயிலாப்பூர் ரோசாரி சர்ச் சாலையில் ஓரமாக வசித்து வந்தவர் தங்கப்பன். அவரது மனைவி ஜெயந்தி. இவர்களில் தங்கப்பனுக்கு நடக்க முடியாது. ஜெயந்திக்கு பார்வை தெரியாது. இந்நிலையில் அவர்களுக்கு அக்கம்பக்கத்தினர், தன்னார்வலர்கள் உணவு கொடுத்து உதவி செய்து வந்துள்ளனர்.

மேலும் அவர்கள் தள்ளுவண்டியை வீடாக மாற்றி வசித்து வந்தநிலையில் நேற்று முதியவர் தங்கப்பனின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பார்க்கமுடியாது என கூறப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டார்.

mylapur 1 - 2026

அதனை தொடர்ந்து வெகுநேரமாக தங்கப்பன் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதை உணர்ந்த ஜெயந்தி, அவர் இறந்துவிட்டதை உணர்ந்து, என்ன செய்வதென தெரியாமல் அழுது கொண்டே அமர்ந்துள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறை மற்றும் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் யாரும் வராத நிலையில் தன்னார்வலர்கள் கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து போலிசார் முதியவரின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மூதாட்டி ஜெயந்தியை ஆதரவற்றோர் முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Related articles

Recent articles

spot_img