கொரோனா: விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க கண்காணிப்பு குழு!

Published:

kaveripattinam people protest1

கொரோனா தொற்றை பரப்பும் வகையில், நோய் கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க, மாவட்ட வாரியாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா தொற்றை பரப்பும் வகையில், நோய் கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களிடம் அபராதம் விதிக்கும் அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தில், முகக் கவசம் அணியாதவர்களுக்கு, 200 ரூபாய்; தனிமைப்படுத்துதலை மீறுதல்; பொது இடங்களில் எச்சில் துப்புதல்; சமூக இடைவெளி பின்பற்ற தவறுவோருக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த சட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ள நிலையில், மாநில, மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img