அட ஏழுமலையானே! ஊழியருக்கு சம்பளம் போட உங்கிட்டயும் பணமில்லையா?! என்ன சோகம் இது பெருமாளே!

08 June24 Tirupathi
08 June24 Tirupathi

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் பணமில்லை…. ஊழியர்களுக்கும் தேவஸ்தான பணியாளர்கள், சிப்பந்திகளுக்கும் சம்பளம் கொடுப்பதற்கு கூட பணம் இல்லை… திருமலா திருப்பதி தேவஸ்தானம் கூறும் கூற்று இது!

உலகிலேயே செல்வச் செழிப்பு மிகுந்த தெய்வம். ஒரு நாளைக்கு ரூ 2 கோடிக்கு குறையாமல் நன்கொடை வந்து சேருகிற கோவில். அதுவும் உண்டியல் ஆதாயம் மட்டுமே அத்தனை. அதற்கும் மேல் வரும் விலை மதிப்பில்லாத நன்கொடைகள், காணிக்கைகள்… கணக்கே கிடையாது.

panchajanyam guest house tirumala tirupati guest house
panchajanyam guest house tirumala tirupati guest house

ஆனால் இப்போது அங்குள்ள பணியாளர்களுக்கும் அதிகாரிகள், தேவஸ்தான சிப்பந்திகளுக்கும் சம்பளம் கொடுப்பதற்குக் கூட பணம் இல்லையாம். திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறுகின்ற வார்த்தைகள் இவை.

லாக்டௌன் காரணத்தால் 45 நாட்களாக திருமலைக்கு பக்தர்கள் வருவது நிறுத்தப்பட்டுள்ளது. நன்கொடைகள் இல்லாமல் போய் விட்டதனால் சம்பளம் கொடுப்பதற்கு இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக திருமலா திருப்பதி அதிகாரிகள் கூறுகிறார்கள்.

லாக்டௌன் காரணமாக 400 கோடி ரூ வருமானத்தை இழந்து விட்டோம் என்றும் இப்போது தினப்படி செலவுகளை சமாளிக்கவே சிரமப்படுகிறோம் என்றும் கூறுகிறார்கள். இந்த பிரச்னைக்கு தீர்வாக என்ன செய்யலாம் என்று முயற்சித்து வருவதாகவும் கூறுகிறார்கள்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

ஆனால் டிடிடி.,யிடம் 8 டன் தங்கம் உள்ளது. 14 ஆயிரம் கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட் உள்ளது. அந்தப் பணம் , அந்த தங்கம் முதலியவற்றை தொடாமல் பிரச்சனையை தீர்ப்பதற்கு முயற்சித்து வருவதாக டிடிடி அதிகாரிகள் கூறுகிறார்கள்.

யாரு வெச்ச கண்ணோ… செல்வம் கொழிக்கும் ஏழுமலையான் கோயிலே இந்த லாக்டவுனில் திணறுகிறதாமே!

ஆனால் இதன் பின்னணியில் பல்வேறு யூகங்களை பக்தர்கள் முன்வைக்கின்றனர். கோவிலை மட்டுமல்ல கோவிலிலுள்ள லிங்கத்தையும் சேர்த்து முழுங்கிடுவான் னு ஒரு பழமொழி உண்டு. இத்தனை நாள் உண்டியலைத்தான் கண் வைத்திருந்தார்கள், இப்போது கோவிலையே ஆட்டய போட்டுட்டாங்க போல இருக்கே என்று கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திருப்பதி தேவஸ்தானம் ஆந்திர அரசுக்கு வருடத்துக்கு ரூ. 2.50 கோடியை அளிக்கிறது. அது தற்போது ரூ.50 கோடியாக அதிகரித்திருக்கிறது. நிதித் தள்ளாட்டத்தில் ஆந்திர மாநில அரசு இருப்பதால், திருப்பதி கோவில் பணம் ரூ.50 கோடியை தற்போது கொடுப்பதாக தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி கூறியுள்ளார்.

ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டே கையே என்று கிராமப் புறப் பழமொழி இருப்பது போல், தற்போது திருப்பதி பெருமாளை ஆட்டையப் போட, சம்பளம் கொடுக்கவே பணமில்லை திணறுகிறோமென்று ஒரு வசனத்தை உலவ விட்டு, பின்புறம் வழியாக பெருமாளுக்கான பணம் வேறு வகைகளில் அரசுக்குச் செல்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர் ஆந்திர மாநிலத்தில்!

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Entertainment News

Popular Categories