ஒரே மாதத்தில் 837 பிரசவம்! நெல்லையில் புதிய சாதனை!

baby born - 2026

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரலாற்றில் ஒரே மாதத்தில் அதிகபட்சமாக 837 பிரசவம் வெற்றிகரமாக நடந்துள்ளது.

கொரோனா அறிகுறிகள் இருந்தவர்களும் பிரசவித்து குணமாகி சென்றதால் மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். நெல்லை தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.

இங்கு உள்ள தனி பிரசவ வார்டில் நாள் தோறும் சராசரியாக 20 பிரசவங்கள் நடைபெற்று வந்தன. பல ஆண்டுகளாக இந்த சராசரி நிலை நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 24ம் தேதி 144 தடை உத்தரவுக்கு பின்னர் இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பிரசவிக்கும் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

குறிப்பாக கடந்த மே மாதத்தில் மட்டும் 837 பிரசவங்கள் நடந்துள்ளன. இது இந்த மருத்துவமனையில் ஒரு மாதத்தில் நடந்த அதிகபட்ச பிரசவ எண்ணிக்கையாகும். இது ஒரு புதிய சாதனை எண்ணிக்கையாக கருதப்படுகிறது.

இதற்கு முன்னர் அதிகபட்சமாக ஒரு மாதத்தில் 600 முதல் 700க்குள்பட்ட எண்ணிக்கையிலேயே பிரசவங்கள் நடந்துள்ளன. மே மாதம் தினமும் சராசரியாக 25 பிரசவங்கள் நடந்துள்ளன. ஒரே நாளில் அதிகபட்சமாக 34 பிரசவம் பெண் மருத்துவ சிகிச்சை நிபுணர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

ALSO READ:  வேளச்சேரி - பிருங்கிமலை எம்ஆர்டிஎஸ்., ரயில் சேவை! பயணிகள் மகிழ்ச்சி!

837 பிரசவங்களில் 354 பிரசவங்களில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்துள்ளன. மற்ற அனைத்து குழந்தைகளுமே இங்கு சுகப்பிரசவமாக பிறந்தது குறிப்பிடத்தக்கதாகும். நாளொன்றுக்கு சராசரியாக 10 அறுவை சிகிச்சை பிரசவங்கள் டாக்டர்களால் கவனிக்கப்பட்டன. இதுவும் ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

மே மாதம் இங்கு பிரசவித்த பெண்களில் கொரானா பாதிப்பு அல்லது கொரோனா அறிகுறி உள்ள கர்ப்பிணிகள் ஆறு பேரும் சிகிச்சைக்காக வந்தனர். அவர்கள் தனி வார்டுகளில் வைத்து கவனிக்கப்பட்டு கொரோனாவில் இருந்து மீண்டு நலமாக பெற்றெடுத்த குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா அச்சத்தையும் மீறிப் பணியாற்றிய மருத்துவப் பணியாளர்களுக்கு டீன் டாக்டர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தாராம், உறைவிட மருத்துவ அலுவலர் ஷியாம் மற்றும் துறைத் தலைவர்கள் டாக்டர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா காரணமாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பது தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக ஏழைகள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரும், ஓரளவு வசதி உள்ளவர்களும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 மாதமாக அதிக அளவில் பிரசவ வார்டுகளில் சேர்க்கப்பட்டு செலவு ஏதுமின்றி குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.

ALSO READ:  இன்று சனி பெயர்ச்சி: சிறப்பு ரயில்கள் இயக்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories