சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும்போது, வேண்டுமென்றே மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியது, கண்டிக்கத்தக்கது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியப் பிரதமரின் இலங்கை பயணத்தின் போது தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டிருப்பது இலங்கை கடற்படையின் அராஜகத்தை வெளிப்படுத்தியிருக்கிறது தமிழகத்தைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியும், வலைகளை அறுத்து கடலில் வீசியும், அட்டூழியம் செய்திருக் கிறார்கள். இதனால் 5 மீனவர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். படகுகள் சேதமடைந்துள்ளது. இச்செயல் மிகவும் கண்டனத்திற்குறியது. ஏனென்றால் இந்தியப் பிரதமர் இலங்கையில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கும் போது இலங்கை கடற்படை இது போன்ற தாக்குதலை வேண்டுமென்றே நடத்தியுள்ளது. எனவே மத்திய அரசு இலங்கை அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும். நேற்றைய தினம் இலங்கைப் பிரதமர் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் எல்லைத்தாண்டி வருபவர்களை சுட்டுக் கொள்வதற்கு இலங்கை கடற்படையினருக்கு அதிகாரம் இருப்பதாக தான் ஏற்கனவே கூறியிருந்ததில் எந்த மாற்றமும் இல்லை என மீண்டும் உறுதிபடக் கூறியிருக்கிறார். இது அவரது அதிகாரவர்க்கத்தைக் காட்டுகிறது. நம் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை பயணத்தின் போது இலங்கைப் பிரதமரின் இது போன்ற பேச்சை சுட்டிக்காட்டியதாகவும், அதற்கு இலங்கை வருத்தம் தெரிவித்ததாகவும் கூறியிருப்பது ஒரு புறம், மறு புறம் இலங்கைப் பிரதமர் மீண்டும் அதே பேச்சை வெளிப்படுத்தியிருப்பது முரண்பாடாக அமைந்துள்ளது. இது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழக மீனவர்கள் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிட்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்த இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் கேள்விக்குறியதாக உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசிடம், மீனவர்களை இலங்கை கடற்படை துன்புறுத்தவோ, கைது செய்யவோ கூடாது என்பதை உறுதிபடக் கூற வேண்டும். இந்தியப் பிரதமர் இனியும் காலம் தாழ்த்தாமல் இலங்கை அரசை கடுமையாக கண்டிப்பதோடு, தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்காமல் இருக்க, இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை நிறுத்த, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தங்கள் மீன்பிடித் தொழிலை பிரச்சனைகளின்றி தொடர மத்திய அரசு வழி வகுத்து தர வேண்டும். என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Less than 1 min.Read
பேச்சுவார்த்தை நடத்தும்போது வேண்டுமென்றே மீனவர்கள் மீது தாக்குதல்: ஜி.கே.வாசன் கண்டனம்
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சற்றுமுன்
₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?
சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்மிகக் கட்டுரைகள்
அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!
இன்று ஸ்ரீ ராம நவமி
ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்….
ஜெய் ஸ்ரீ ராம்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சற்றுமுன்
₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?
சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்மிகக் கட்டுரைகள்
அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!
இன்று ஸ்ரீ ராம நவமி
ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்….
ஜெய் ஸ்ரீ ராம்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
இந்தியா
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

